எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 5 மார்ச், 2015

கணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப்படி?




ஒரு பென்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும்..சுக்கிரன் ஜாதகியை குறிக்கும்...செவ்வாயும் சுக்கிரனும் ஒரு ராசியில் இருந்தாலோ அடுத்தடுத்த ராசிகளில் இருந்தாலொ அந்த பெண் கணவன் மீது மிக பிரியமாக இருப்பாளாம்..ஆசை அதிகமாகி புருசனை அப்பான்னு கட்டிக்கிட்டாளாம் ஒருத்தி..என கிராமங்களில் சொல்வது போல,தன் கணவன் எனக்கு அப்பா போல,நண்பன் போல,தாயை போல என தன் தோழிகளிடம் புகழ்ந்துகொண்டே இருப்பாளாம்...

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை செக்ஸ் எண்ணங்களை தூண்டக்கூடியதுதான் என்றாலும் இது கணவன் மீதான ஆசையை மட்டும் குறிக்கிறது..

பெண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 2ல் வக்கிர கிரகம் இருந்தால் ஜாதகி மற்றும் ஜாதகியின் கணவர் இருவருமே ஒருவரையொருவர் பிரிய முடியாமல் தவிப்பார்கள் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்..எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்...

செவ்வாய்க்கு இரண்டில் வக்கிர கிரகம் இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள்..

பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருந்தால் கணவர் அப்பெண்ணின் சொல்படி நடப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக