எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 8 அக்டோபர், 2015


ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்னத்திற்கு

ஏழாம் அதிபதி சந்திரன் நட்சத்திரத்தில் நின்றால் வரக் கூடிய மனைவி அதிக சொத்து அல்லது அதிக வருமானமுடைய மனைவியாக அமைவார்கள்.

வாஸ்து தோஷ்ங்களை நிவர்த்திசெய்யும் கர்ப்ப பெட்டி


நண்டு வளையில் இருந்து எடுக்கபட்ட மண்,,யானையின் காலடி மண்,,புற்றுமண்,,குளத்துமண்,,எருதின் காலடிமண்
இந்த 5 வகை மண்ணை சேர்த்து 9 அறைகளாக ஒரு பெட்டி செய்து அதில் நவதான்யங்களையும்,,நவரத்தினங்களையும் நிரப்பி
பின்னர் செம்பு,,பித்தளை,,ஈயம்,,தங்கம்,,வெள்ளி போட்டு மீண்டும் நவதான்யங்களைபோட்டு மண்மூடியால் மூடி கட்டிடம் கட்டும் கலைஞரை
வைத்து பூஜை செய்து,,மனையின் ஈசான்யத்தில் பள்ளம் தோண்டி அதற்க்குள் வைத்து பூஜைபோடு மண்ணால் மூடி விடவும்
இப்படி செய்தால் அந்தவீட்டில் எந்த தோஷ்மும் அண்டாது சகல செல்வங்களும் உண்டாகும்

சௌபாக்கியவதி யோகம் சில விஷேச விதிகள்

1 .இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன்
அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள்
=.
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
=
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12
இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
=
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள்
=.
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக
விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி
மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும்
=.
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,
அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் ..
=
7. இரவில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவார் .
=
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++