எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 13 டிசம்பர், 2019

ஆரஞ்சு கலர் கேரட்டுக்கு பதிலா இனி கருப்பு கலர் கேரட் சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?... இதுதான் அந்த ரகசியம்...

கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று நமக்குத் தெரியும். அதில் நாம் வழக்கமாகச் சாப்பிடும் ஆரஞ்சு நிற கேரட்டைத் தவிர வேறு என்ன கலரில் கிடைக்கும். குறிப்பாக கருப்பு நிற கேரட்டில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாக

Boy Bestie - பாய் பெஸ்டி

கனவில் ஒரு பெண் வந்தாள். டேய் நீ என்னை நிஜமாவே லவ் பண்றியா என்றாள். 

கனவாக இருந்தாலும் உஷாராக நீ ..

80 கிட்டா ?

90 கிட்டா ?

2கே கிட்டா ? என்றேன் .

என்னைப் பாத்தா உனக்கு எப்டி தெரியிது என்றாள் . 

அவள் கேட்ட கேள்வியும் அவள் சொன்ன பதிலும் 80 90 2கே என எல்லா கிட்டுக்கும் பொதுவானதாக இருந்ததால் குழம்பிப்போனேன்.

அதெல்லாம் இல்ல , சொல்லு என்றேன்...

ஏன் அப்டி கேக்கற என்றாள்...

சரி கனவுப் பெண்தானே என்று ஓப்பனாக சொன்னேன்..

80 கிட் என்றால் - எத்தனை பேர் வந்தாலும் நீதாண்டி என் பொண்டாட்டி 

90 கிட் என்றால் - நீதான் என் தேவதை , என் தாய் , உன் மடில படுத்துக்கட்டுமா ?

2கே கிட் என்றால் - இருடி இப்பதான் சாப்டு முடிச்சேன் ,வயிறு ஃபுல்லா இருக்கு ,  10 மினிட்ஸ் ... 

அவள் , கனவுன்னு ஓவரா பேசர இல்ல , நீ கண்ணு முழி அப்புறம் இருக்கு என்றாள். 

சரி முழிக்கிறதுக்குள்ள கிஸ் அடிச்சிக்கலாம் வா என்றேன். 

அவன் வந்துடட்டும் , அதான் சேஃப் என்றாள்.

வியாழன், 12 டிசம்பர், 2019

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிங்க... ஏராள நன்மைகளை அள்ளித்தருமாம்!

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் உடலில் பல நோய்களுக்கு தீர்வு தருகின்றது.

அந்தவகையில் தற்போது இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


வயிற்றுப் பிரச்னைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், 2 துண்டு வெல்லத்தை சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும். வெல்லம் மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்படும்.

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் சந்தோஷமான ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும்.
வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். இதற்கு வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும்.
வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால் சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். கற்கள் அளவில் மிகவும் சிறியதானால், எளிதில் சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

காலையில் பேரிச்சை சாப்பிடுவதால் இந்த 4 நோய்களையும் வேரிலிருந்து அகற்ற முடியும்

வணக்கம் நண்பர்களே, திராட்சை உலர்த்திய பிறகு அதை கிஸ்ஸாமிஸ் என்று அழைக்கிறோம், பேரிச்சை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் பல மாற்றங்களை நீங்கள் காணலாம் மற்றும் பேரிச்சை இரண்டும் சூடாக இருந்தால், குளிர்காலத்தில் அவற்றை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். வெற்று வயிற்றில் பேரிச்சை சாப்பிடுவதன் நன்மைகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் -



1. குறைந்த இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் 3-4 பேரிச்சைவெதுவெதுப்பான நீரில் கழுவி கர்னல்களை அகற்றுவார்கள். பசுவின் சூடான பாலுடன் அவற்றை வேகவைக்கவும். காலை மற்றும் மாலை வேளைகளில் வேகவைத்த பால் குடிக்கவும். குறைந்த இரத்த அழுத்தம் சில நாட்களில் விடுபடும்.


2. மூன்று பேரிச்சை சாப்பிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் குணமாகும். பேரிச்சை பனை ஊறுகாயை உணவோடு சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படாது, வாயின் சுவையும் நன்றாக இருக்கும். தேதிகளில் ஊறுகாய் தயாரிக்கும் முறை சற்று கடினம்.

3. நெய்யில் வறுக்கப்பட்ட பேரிச்சை ஒரு நாளைக்கு 2-3 முறை எடுத்துக்கொள்வது இருமல், தும்மல், சளி மற்றும் சளிக்கு நிவாரணம் அளிக்கிறது.

4. பாலுடன் உட்கொள்ளும்போது, ​​அது உடலை வலிமையாக்குகிறது. உங்கள் உடல் பலவீனமாக இருந்தால், நீங்கள் பாலில் பேரிச்சை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்கும், மேலும் உங்கள் உடலும் வலிமையாகிவிடும்.உடல்நலம் தொடர்பான சமீபத்திய செய்திகளைப் பெற எங்களைப் பின்தொடரவும். இடுகையைப் போலவே, அதைப் பகிரவும், கருத்து தெரிவிப்பதன் மூலம் உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

டிசம்பர் 31 வரை கெடு!வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ அதன் டெபிட் கார்டு பயனர்களை, வருகிற டிசம்பர் 31, 2019 க்குள் ஈ.எம்.வி-சிப் கார்டிற்கு (EMV-chip Card) மாறுமாறு கேட்டுக்கொள்கிறது.

ஒருவேளை நீங்கள் இந்த பரிந்துரைக்கு இணங்கவில்லை என்றால், எஸ்பிஐ வங்கி ஆனது அதன் அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை அட்டைகளையும் செயலிழக்கச் செய்யும், அதாவது டிஆக்டிவேட் செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் இந்த நடவடிக்கை? என்பது உட்பட நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள் இதோ!

01. அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான காலக்கெடுவாக 2019 டிசம்பர் 31 ஐ எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது

02. இந்த நடவடிக்கையின் கீழ், எஸ்பிஐ கார்டுகளின் வேலிடிட்டி பீரியட் பொருட்படுத்தப்படாது. அதாவது எஸ்பிஐ கார்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடித்திருந்தாலும் கூட எஸ்பிஐ வங்கியானது மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகள் ஆனது டிஆக்டிவேட் செய்யும். இதன் பொருள் டிசம்பர் 31 க்கு அப்பால் காலாவதியாகும் அட்டைகள் கூட டிஆக்டிவேட் செய்யப்படும்.

03. மேக்னட் ஸ்ட்ரைப்ஸ் கார்டுகளின் வழியாக தொடர்ந்து நாடாகும் மோசடிகளைக் கருத்தில் கொண்டே அவைகள் டிஆக்டிவேட் செய்யப்படுகின்றன. ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பம் ஆனது டெபிட் கார்டு பேமண்ட்களுக்கான சமீபத்திய உலகளாவிய தரமாகும். இந்த தொழில்நுட்பத்தில் அட்டைதாரரின் தரவை சேமித்து பாதுகாக்கும் உட்பொதிக்கப்பட்ட நுண்செயலி சில்லுகள் உள்ளன. மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டர் வழியாக, எஸ்பிஐ கூறுகையில், "உத்தரவாத நம்பகத்தன்மை, ஆன்லைன் பேமண்ட்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் மோசடிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்." என்று ஈ.எம்.வி சிப் தொழில்நுட்பத்தை பற்றி குறிப்பிட்டுள்ளது.

04. ஈ.எம்.வி சிப் இல்லாத மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் மற்றும் ஈ.எம்.வி சிப் ஆகிய இரண்டையும் கொண்ட எஸ்பிஐ டெபிட் கார்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று அர்த்தம். சிப் இல்லாத பழைய மேக்ஸ்ட்ரைப் கார்டுகள் மட்டுமே டிஆக்டிவேட் செய்யப்படும்.

05. ஈ.எம்.வி சிப் கார்டை பெறாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை மாற்றுவதற்கு ஹோம் பிரான்ச்சை அணுக வேண்டும்

06. வாடிக்கையாளர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு எஸ்பிஐ இணைய வங்கி வழியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, “eServices” டேப்பின் கீழ் http://onlinesbi.com இல் உள்நுழையவும். பின்னர் “ஏடிஎம் கார்டு சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, குறிப்பிட்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

07. எஸ்பிஐ யோனோ ஆப் மூலமும் பயனர்கள் தங்களுக்கான புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்

08. மேக்னட் ஸ்ட்ரைப் டெபிட் கார்டுகளை மாற்றுவது முற்றிலும் இலவசமான ஒரு செயல்முறை ஆகும். அதாவது மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை ஈ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான கார்டுகளாக மாற்ற எந்த கட்டணமும் வசூலிக்கப்பட்ட மாட்டாது.

09. நாம் பேசும் ஈ.எம்.வி சிப் ஆனது டெபிட் கார்டின் முன் (மைய-இடது பக்கத்தில்) வைக்கப்பட்டுள்ளது. ஆக பயனர்கள் தங்கள் புதிய கார்டில் ஈ.எம்.வி சிப் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.


10. புதிய டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டு முகவரியை சரிபார்க்கச்சொல்லியும் எஸ்பிஐ பரிந்துரைக்கிறது. பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு மட்டுமே புதிய கார்டு அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்களின் தற்போதைய வீடு முகவரி ஆனது வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

இண்டர்நெட் காமெடிகள்

இண்டர்நெட் வேலை செய்கிறதா என்று பார்க்க கூகிள்.காம் போட்டு பார்ப்பவர்கள் தான் அதிகம். இணைய வேகம் மிகவும் குறைவாக இருக்கும் போது , கூகிளை விட ஃபேஸ்புக் நன்றாக வேலை செய்கிறது. 

கூகிள் , பேஜ் நாட் ஃபவுண்ட் சொன்னாலும் , ஃபேஸ்புக் முக்கி முக்கி , உடை களைய மறுக்கும் பெண்ணை கெஞ்சி கூத்தாடி களைய வைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக ஒருவழியாக காட்டி விடுகிறது ஃபேஸ்புக் பக்கத்தை. 

ப்ரோட்டோக்கால் பற்றி எல்லாம் படித்து இருந்தாலும் ஒரு விஷயம் குழப்புகிறது.

வேகம் குறைவான இணையத்தில் முதலில் கூகிள்.காம் போட்டேன். வரவில்லை. மூன்று நான்கு முறை போட்டேன். வரவில்லை. பேஜ் நாட் ஃபவுண்ட்தான்.

ஃபேஸ்புக்.காம் போட்டேன். கவனிக்கவும் ,ஆப் இல்ல , க்ரோமில் போட்டேன். ஹெட்டரில் முதலில் காட்டி விட்டு தவ்வி தவ்வி ஒருவழியாக ஃபேஸ்புக் வந்து விட்டது. 

இப்போது கூகிள் போட்டேன். அதுவும் ஃபேஸ்புக்கின் ஏதோ மேஜிக் ப்ரோட்டோக்காலை காப்பி அடித்து தவ்வ ஆரம்பித்தது...ஆனால் ஃபேஸ்புக்கை விட தாமதமாகத்தான் வந்தது. இதற்கே கூகிள் பக்கத்தில் பெரிதாக ஒன்றுமில்லை , ஆனால் ஃபேஸ்புக் அப்படி அல்ல !

நீங்கள் ஃபேஸ்புக்.காம் போட்டபோது இணைய வேகம் அதிகரித்து இருக்கும் என்று சொல்லாதீர்கள். பலமுறை பல்வேறு இடங்களில் முயன்று பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். 

ஃபேஸ்புக் ஏதோ தில்லாலங்கடி செய்கிறது...அப்படி செய்கையில் கூகில் காப்பி அடித்து கற்றுக்கொண்டு முயன்று பார்க்கிறது. 

நான் சொல்வது டெக்னிக்கலாக சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று தோன்றலாம்...ஆனால் அப்படி அல்ல !

நியூ இயர் ப்ளான் - தமிழர்களின் திட்டம்


கோவா போலாமா ? 

சென்னை டூ கோவா ரயில் கட்டணம் - 475 /- போய்ட்டு வர 950 /- 

சிம்பிளா ஹோம் ஸ்டேல தங்கினா ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 500 /- 3 நாளைக்கு 1500 

ஒரு டின் பீரு - 60 /- 5 பீர் அடிச்சா கூட 300 /- மூணு நாளைக்கு 900 /- 

ஓல்ட் மாங்க் 12 வருசம் ஒரு ஃபுல்லு - 650 /- மூணு நாளு வச்சி குடிக்கலாம். 

சாப்பாடு , டீ காபி எல்லாம் நம்மூரு விலைதான் .

பீச்  நுழைவு  இலவசம் . பீச் பார்ட்டி எண்ட்ரி ஃப்ரீ ! சரக்கு வான்ஙினா மட்டும் காசு !

மொத்த செலவு = 950 +1500 + 900 = 3350 ரூவாய் சாப்பாடு சேக்காம ...அதைத்தான் எங்க இருந்தாலும் திங்கப்போறோமே ....

ஆனா ...கோவா வா அதெல்லாம் பணக்காரனுங்க போற ஊருப்பா ...நாம இங்கயே குவாட்டர் அடிச்சிட்டு கவுந்து படுத்துப்போம். இம்மாம் நாளு திட்டம் போட்டு பேசிட்டு இருந்ததே சொகமா இருந்திச்சினு நினைச்சிகிட்டு கடைசி நேரத்துல  டெம்ப்ட் ஆயி இங்க இருக்குற தொம்மை ஹோட்டல்ல எண்ட்ரி 2500 அழுதுட்டு அன்லிமிட்டட் IMFL அடிச்சி வாந்தி எடுத்துட்டு கை கால் முறிச்சிடிட்டு மறுநாள் ஹாச்பிடலுக்கு 2000 கட்டி கணக்கை ஒரு மாதிரி சரி பண்ணிக்க வேண்டியது.

கோவால்லாம் ரிச் பசங்க போறது , நாம ஏழைங்க ....

சாட்டில் இரண்டு வகை.

ஆம்பளைப் பசங்களுக்கு இம்ப்ரஸ் பண்ணத் தெரியலை , சாட் பண்ண தெரியலை , இண்ட்ரெஸ்டிங்கா பேசத் தெரியலைன்னு பெண்கள் பக்கம் இருந்து ஏகப்பட்ட புகார்கள். 

இவனுங்களும் , அது எதோ மாய வித்தை போலன்னு பல பல்லு போன பீசுங்க கிட்ட தீட்சை கேட்டுகிட்டு குருவே , குருவேன்னு திரிஞ்சி கிட்டு கிடக்கறானுங்க ....

சிலவனுங்க , குரங்கு குட்டிக்கரணம் போடுறது , தேவாங்கு முடிக்கயிறு கட்டறதுன்னு ஸ்கில் காட்டிட்டு கிடக்கறானுங்க. 

இதுவரை என்னுடன் புதிதாக சாட் செய்த எந்த பெண்ணும் என்னை இம்ப்ரெஸ் செய்ததே இல்லை.

இம்ரெஸ் எல்லாம் பெரிய வார்த்தை , ஒழுங்காக டு தி பாயிண்டாக கூட பேசியதில்லை. 

மொக்கையோ மொக்கை , மரண மொக்கை. 

முதல் நாள் என்றல்ல , ஒரு மாசம் கழித்தும் இதே கதைதான்....

"சாப்டாச்சா "

"நீங்கள்ளாம் பிஸி"

இதை விட பொதுப்படையாக பல பெண்கள் ஆரம்பிப்பது 

"அப்றம் "

நான் குட்டிப் பயலாக இருந்த போதே , யாரேனும் அப்புறம் என்றால் விழுப்புரம் என்று பதில் சொல்லுவார்கள். இன்னும் இந்தப் பெண்கள் விழுப்புறத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள். 

இந்த லட்சணத்தில் எங்களுக்கு நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களைத்தான் பிடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப்புகள். ஒரு ஜோக் அடித்தால் , ஜோக் புரியாமல் பர்ஸனலாக எடுத்துக்கொண்டு முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டியது.

சாட்டில் இரண்டு வகை.

1) இன்ஃபர்மேஷன் வேண்டி ,ஒரு விஷயத்தை  பாராட்ட ..இதைப்போன்ற விஷயங்களுக்கு ஹாய் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும்.

2) க்ரஷ் , ஃப்லிர்ட் , ரொமான்ஸ் , இம்ப்ரெஸ் இந்த எழவில் எதேனும் நோக்கம் இருந்தால் கொஞ்சம் ஹோம் work செய்து விட்டு வர வேண்டும் பெண்களே!

புதன், 11 டிசம்பர், 2019

கோயிலில் வழிபடும் முறை


கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறைகள்


*தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

*கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.

*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.

*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

*முருகன்,நடராஜர்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

*கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும். 

*வழிபாடு முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த நலமாகும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

உலகின் மிகப்பெரிய தேனீ 'கண்டுபிடிப்பு'.

வருகிறது வைஃபை 6 (Wi-Fi 6): மிக வேகமனதா? எவ்வளவு வேகமானது ?



அடுத்த தலைமுறை வைஃபை - Wi-Fi 6, இப்போதைய வேகத்தை விட அதிக வேகத்தைக் கொண்டுவருகிறது. வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் (Wireless Technology) ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான Wi-Fi 6 அதிகபட்ச வேகமாக 9.6 Gbps இனை கொண்டுள்ளது.

விரைவான Wi-Fi , இது நல்ல செய்தியாகும்: வேகமான இணையம் (Internet)

சனியைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருகின்றன‌. அமெரிக்காவின் ‘கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்’ என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் சனிக்கிரகத்தில்

இந்த அறுசுவை உணவு என்பது ருசிக்காக அல்ல.. இந்த ஒவ்வொரு சுவையில் உள்ள மருத்துவத்தை அறியுங்கள்



1...காரம்.. 

உடலுக்கு உஷ்ணத்தை தருவதும், உணர்ச்சி, கோபம், பயம், ஆசை போன்ற உணர்வுகளை தருகிறது

2...கசப்பு.. 

உடலில் தோன்றும் நச்சுக்கிருமிகளை அழித்து, சக்தியை தருகிறது

3....இனிப்பு... 

உடலின் தசைகளை வளர்த்து, சுறுசுறுப்பை தருகிறது

4...புளிப்பு... 

இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு, அழுக்கு நீக்கிறது

5....துவர்ப்பு.. 

உடலில் எதோ காரணத்தால் இரத்தம் வெளியேறாமல் உறைய செய்து இரத்தம் வீணாகமல் காக்கிறது

6...உப்பு.. 

ஞாபகசக்தி, அறிவு, போன்ற சக்தியை தருகிறது, 

ஆக உணவில் எல்லா சுவைகளும் அவசியம் இருக்கும் பட்சத்தில் உடலில் அனைத்து சத்துக்களும்  இருந்து உடலை காக்க வேண்டும் என்றே  சித்தர்கள்  உணவில்  அறுசுவையின் அவசியத்தை  தந்தார்கள்.

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?



இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.
அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.
 

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.
அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.
ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.
குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.
அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.
ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

டான்சிலுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?

சிறு குழந்தைகளுக்கு (Tonsils, Adenoids) எனத் தொண்டையில் இருக்கிற உறுப்புகள் பெரிதாக வாய்ப்பு உண்டு. இதற்குக் காரணம் தொற்றுக் கிருமிகள். பல நேரங்களில் இது அறிகுறிகளைக் காட்டுவது இல்லை. ஒரு சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமமும், ஒரு சிலருக்கு உணவை விழுங்குவதில் சிரமமும், தொண்டை வலியும், காது வலியும் வரும். குறட்டையும் ஏற்படலாம். டான்சில், அடினாய்டு என்பவை நிணநீர் தொகுப்பு. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்குகின்றன. பாக்டீரியாவோ, வைரஸோ தொண்டையின் வழியாக உடலுக்குள் செல்லாமல் துவாரபாலகர்களைப் போல இவை பாதுகாக்கின்றன. தொண்டையின் உள்ளே இரண்டு பகுதிகளில் டான்சில்ஸ் என்னும் உறுப்பு உள்ளது. அடினாய்டு என்ற உறுப்பு சற்று மேற்புறமாக, பின்னால்

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.

நான் அறிந்த சனிபகவான் பற்றியே சிறு கதை



உலகநாயகன் சூரியபகவானின் தர்மபத்தினி சமுக்ஞாவிற்கு இப்போதெல்லாம் ஒரே தர்மசங்கடம்.

இல்லற வாழ்க்கைக்கு இடையூராக இருப்பதே சூரியனின் கடும் வெப்பம்தான். நெருங்கவே முடியாத நெருப்பாக இருப்பவரிடம் இருந்து கொஞ்சம் காலம் விலகி இருந்தால் என்ன?

இந்த எண்ணத்திற்கு சூரியன் சம்மதிக்க மாட்டார் என்பதும் தெரியும். தன் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பவர், தற்காலிக பிரிவிற்கு கூட தயாராக

ஆபாசம் தொடர்பான விடயங்கள் google தேடலில் வராமல் தடுப்பது எப்படி?

பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் இதனை லாக் செய்து கொடுத்துவிடுங்கள்...

இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது. 

இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

செக்ஸ் குறித்த உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது!

செக்ஸ் என்பது வெறும் இச்சை உறவல்ல. அது இன்னொரு உயிரை துளிர்விட செய்யும் இயக்கம். ஒரு பெண்ணை முழுமையடைய செய்யும், மகிழ்வுற செய்யும் உறவும் கூட.திருமணமான புதிதில், குழந்தைகள் பெற்ற பிறகு தம்பதிகள் கருத்தடை பயன்படுத்த ஆரம்பிப்பது உண்டு. கருத்தடை என்றாலே நாம் அறிந்தது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் மட்டுமே. ஆனால், இவற்றை தவிர வேறு பல விஷயங்கள் இருக்கின்றன.

கருத்தடை மட்டுமல்ல, சாதராணமாக நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது, கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களும் சிலவன இருக்கின்றன.
இவற்றை குறித்து பெரும்பாலான தம்பதிகள் அறிந்திருப்பது இல்லை.

சாம்பார் வடை


மெதுவடை மீது சாம்பார் ஊற்றி வைத்தால் அது தானே சாம்பார் வடை.! இதுக்கெல்லாம் ஒரு பதிவா எனக் கேட்கும் அறுசுவை அறியா குழந்தைகளாக நீங்கள்.! ஆம் எனில் இப்பதிவைப் படிக்காது கடந்து போய் விடவும்.. இல்லை எனில் தொடர்ந்து படிக்கவும்.! பொதுவாக சாம்பார் வடை என்பது மெதுவடை மீது சாம்பார் ஊற்றித் தருவது என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.!

இந்த திரிகளை கொண்டு விளக்கேற்றினால் கிடைக்கும் பலன்கள்...!





தாமரைப்பூத்தண்டின் திரி: 

தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும்.

பஞ்சுத்திரி: 

பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்


சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு

திங்கள், 9 டிசம்பர், 2019

இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!




நம்மில் பலருக்கும் ஃபிளாட்டான வயிறு வேண்டும் என்ற ஆசை இருக்கும். இடுப்பைச் சுற்றி டன்லப் டயர்களை மாட்டிக் கொண்டு அலைந்தாற் போன்று நீடித்த தொந்தியும், தொப்பையுமாக இருக்க யாருக்குத்தான் பிடித்திருக்கிறது?! ஒருவகையில் குண்டாக இருப்பவர்கள் அனைவருக்குமே இது வாழ்நாள் கனவாக இருக்கலாம். சிலர் எப்படியாவது ஜிம், வொர்க் அவுட், டயட், யோகா, உடற்பயிற்சி, ஜூம்பா நடனம் என பாடாய்ப்பட்டு கருமமே கண்ணாக இருந்து இளைத்தும் விடுகிறார்கள். 

அதாவது சிலரால் மட்டுமே அப்படி இளைக்க முடிகிறது! ஆனால் பலருக்கும் இந்த ஃப்ளாட் டம்மி அட... அதாங்க தொப்பை இல்லாத வயிறு என்பது

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

சம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். 

அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.

காய், கறின்னு எல்லாத்துலயும் இந்த குழம்ப செய்ய முடியும். கிரேவி கெட்டியா இல்லாம, முழுக்க முழுக்க தண்ணியா இருக்கும், ஆனா டேஸ்ட்ட அடிச்சுக்கவே முடியாது. நான் இந்த குழம்ப இது வரைக்கும் சாப்பிட்டதே இல்ல, அதனால நாட்டுக் கோழி தண்ணீர் குழம்ப ஆர்டர் பண்ணுனேன்

மிளகு, சீரகம், மசாலான்னு நாட்டுக் கோழி குழம்புல என்னல்லாம் இருந்த, எந்த மணம் வீசுனா நாக்குல எச்சில் ஊறுமோ, சந்தேகமே இல்லாம அப்படியே இருந்தது. மசாலாவோட அளவெல்லாம் கரெக்ட்டா இருந்ததால டேஸ்ட்டும் யம்மியா இருந்துச்சு. 

மசாலாவுல வெந்திருந்த எலும்பும் சதையுமான பீஸெல்லாம் எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரியல. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த குழம்புல இருந்த கறி அப்படி இல்ல. நல்லா வெந்து, சாப்பிடும்போது இதமா இருந்துச்சு. சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் சாப்பிடலாம்.

கால் கிலோ குழம்பு 200 ரூபாய்.
இன்னொரு விஷயம் என்னன்னா, தண்ணீர் குழம்பு எப்படி எனக்கு ஃபர்ஸ்ட் டைமோ, அதே மாதிரி நாட்டுக் கோழி முட்டையோட பையையும் அப்போ தான் முதல் முறையா பார்த்தேன். முட்டையோட டேஸ்ட் ஒரே மாதிரி இருந்தாலும், பார்வைக்கு வித்தியாசமா இருந்துச்சு.

இனிமேல் யாராச்சும் ஈரோடு, சேலம் பக்கம் போனீங்கன்னா, மறக்காம இந்த தண்ணீர் குழம்ப டேஸ்ட் பண்ணிட்டு வாங்க!

ஆம்பூர் பிரியாணி





1. மட்டன் கறி – 1 கிலோ
2.வெங்காயம் – 1/4 கிலோ
3.தக்காளி – 1/2 கிராம்
4.இஞ்சி பூண்டு விழுது
5.பச்சை மிளகாய்
6. எலுமிச்சை
7.நறுமணப்பொருட்கள்
8. தயிர்
9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி
10.கடலை எண்ணெய்
11.கொத்தமல்லி – புதினா
12.உப்பு
13. மிளகாய் தூள்
14. கரம்மசாலா தூள்
15.தனியா தூள்
16. சிவப்பு மிளகாய் தூள்
 

செய்முறை:
 
1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.
 
2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
 
4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
 
5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
 
6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
 
7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
 
8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
 
9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.
 
10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.
 
11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.

தேங்காய் பன்


சேலத்தில் எனது தந்தையார் புகழ் பெற்ற ஸ்வீட் ஸ்டால் & ஓட்டல் வைத்திருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் தின்பண்டங்கள் வாங்கி வரவே மாட்டார்கள்.. அப்படி வந்தால் சாத்துக்குடியும் ஆப்பிளும் தான்.. முதன் முதலில் காவல் துறையில் பணிபுரிந்த எங்கள் அசோகன் அண்ணன் எங்களுக்கு ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருந்தார்!

அவரது சீருடை போன்ற காக்கி நிறத்திலேயே பெரிய காகிதப் பொட்டலம்..

இப்படியும் ஓர் உணவகம்



சென்னையில் இருந்து திருச்சி போகும் பிரதான சாலையில் சரியாக 99வது கிலோமீட்டரில் மேல்மருவத்தூர் தாண்டி அரப்பேடு சந்திப்பில் இருக்கிறது 99 கிலோமீட்டர் காபி ஷாப்.
கடந்த வாரம் அந்த வழியாக போகும் போது அந்த காபி ஷாப் போயிருந்தேன்.

வாசலில் இருந்த ஒரு போர்டு வித்தியாசமாகப்பட்டது.அதில் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவை ரோட்டில் ஆபத்தான முறையில் நின்று சாப்பிடாமல், எங்களது உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உட்கார்ந்து நிம்மதியாக சாப்பிடலாம், இங்குள்ள பிற வசதிகளையும் தாரளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எழுதப்பட்டு இருந்தது.

தேவதைகளின் தேரோட்டம்-சிறுகதை



   
சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் இரயிலில்   நானும் சென்னைக்கு கிளம்பினேன் அலுவலக பணிக்காக.நான் அமர்ந்திருந்த கம்பார்ட்மெண்ட் நிரம்பி வழிந்தது பயணிகளால் .

இரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எனக்கு இரண்டு விஷயம் நன்றாய் புரிந்தது .என்னை சற்றிலும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் புரிந்தது .ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரியவர் மட்டும் அமைதியா உக்காந்துட்டு இருந்தார் .மற்ற அனைவரும் செல்போன் சகிதம் தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் அந்த குடும்பம் உணவு பொருட்களை சாப்பிட தொடங்கியதும் நானும் என்னையும் அவர்களுக்குள்

பிடித்த மீன் குழம்பு

மனைவி ஒருநாள் தன் கணவனுக்குப்

பிடித்த மீன் குழம்பு சமைத்தாள்.

இன்று எப்படியும் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை.

கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட

அமரச் சொன்னாள்,

மனைவி சாப்பாடு பரிமாறினாள்.

" என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?

" நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா

கைப் பக்குவம் உனக்கு இல்ல.... ....

எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு

தெருவே மணக்கும்... அப்பப்பா.......ருசி

சூப்பரா இருக்கும்.

அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார்.

மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது

தன் கணவன் குழம்பின் ருசியை பாராட்டததை நினைத்து.

எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.

அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி சமைக்கறீங்க ? தெருவே மணக்குது.

உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.

அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று.

நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே

உயர்த்திப் பேசுகிறான். மகன் பேசுவது தவறில்லை என்றால் கணவன் பேசியதும் தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.

புரிந்து கொள்ளும் ஒரு மனைவி இருந்தால் அவளும் அம்மாதான் கணவனுக்கு

சென்னா மசாலா

தேவையான பொருட்கள்.     :
வெள்ளை கொண்டக்கடலை.   : 100 கிராம்.

வெங்காயம்.       : 2
தக்காளி.         : 2
பச்சை மிளகாய்.  :2
இஞ்சி பூண்டு விழுது.  : 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்.    : 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்.    : 1 டீஸ்பூன்

கொங்கு கிராமியத்து பூண்டு ஊறுகாய்


இந்த ஊறுகாயை எனது தாத்தி அடிக்கடி செய்து வைத்து விடுவார்கள்.

இந்த ஊறுகாயை தயிர் சாதத்துடன் சாப்பிடுவதற்கு அமிர்தத்தை உண்பது போல் தோன்றும்.

தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் 250 கிராம்
புளி 100 கிராம்
மரசெக்கு நல்லெண்ணெய் 70 மில்லி
வரமிளகாய் தூள் 3 தேக்கரண்டி
உப்புதூள் தேவையான அளவு
பெருங்காயம் 1 சிட்டிகை
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
வெதுவெதுப்பான தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

1. ஒரு வடசட்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உரித்த பூண்டு பற்களை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.

2. பூண்டு பற்களை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

3. இப்பொழுது வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை ஊற வைக்க வேண்டும். சிறிது நேரம் ஊறிய பின்னர் அதை கரைத்து நல்ல கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது நன்றாக ஆறிய பூண்டு பற்களில் பாதியை எடுத்து நன்றாக விழுதாக நைசாக அரைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மீதமுள்ள மரசெக்கு நல்லெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும். அதில் பெருங்காயத்தை சேர்த்துகோங்க , பின்பு அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இருந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

7. அதில் அரைத்து வைத்துள்ள பூண்டு விழுதையும் , வறுத்து வைத்துள்ள பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் வரமிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.  இந்த கலவையை 15 நிமிடங்கள் வரை சிறுதீயில் கொதிக்க வைக்கவும்.

9. பிறகு அடுப்பை அணைத்து விட்டு பூண்டு ஊறுகாயை நன்றாக ஆற வைத்து. பின்பு அதை ஈரமில்லாத, காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்து கொள்ளவும்.

பச்சை பட்டாணி மசாலா

தேவையான ப்பொருட்கள்.    :

வேகவைத்த 
பச்சை பட்டாணி.    : 250 கிராம் கிராம்
வெங்காயம்.      : 1 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி.     : 1 (பொடியாக நறுக்கவும்)
கடுகு.      : 1 தேக்கரண்டியளவு
உளுந்து.   :1 தேக்கரண்டியளவு
மஞ்சள் தூள்.    :1/2 தேக்கரண்டியளவு
மிளகாய்த்தூள். : 1 டீஸ்பூன்
பூண்டு.    : 3 பல்(பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை.  : சிறிது
கொத்தமல்லி.    : சிறிது

செய்முறை.    :
1.ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு பூண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

2.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

3.பிறகு வேகவைத்த பச்சை பட்டாணியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

4.மஞ்சள்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5.கெட்டிபதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மூங்கில் அரிசி பயன்கள்மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..!



மூங்கில் அரிசி நெல் போலவே இருக்கும், பழங்குடி மக்களின் முக்கிய உணவு. இந்த மூங்கில் அரிசி உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்தை வழங்கும். மூங்கில் அரிசி என்பது காடுகளில் விளைகின்ற 60 வயதான மூங்கில் மரங்களில் உள்ள பூப்பகுதியில் இருந்து சேர்க்கப்படும் விதைகளாகும்.

தினமும் மூங்கில் அரிசி உட்கொள்வதினால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் நிகழ்கின்றது.

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்கள்:-
இந்த மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இங்கு மூங்கில் அரிசி பயன்கள் (bamboo rice benefits in tamil) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

லைக்குகளை அள்ளுவது எப்படி?


செட்டிங்ஸை பப்ளிக்ல வைக்கவும்

ஒரே ஒரு கமெண்ட் வந்தாலும் தனி கமெண்டில் பதில் போடவும்.
(ரிப்ளை அல்ல)

பதிவுக்கு சம்மந்தமான ஆட்களை கமெண்டில் இழுக்கவும்.

உதாரணமாக
இட்லி காபி பதிவுக்கு என்னை.
நான் கொடுக்கற பதிலுக்கு வேறொரு ஆளை சாட்டி மறுபடியும் கமெண்டணும்.

யாரை கமெண்டில் டேக் செய்யலாம்?
உப்புமான்னா நாக்ஸை (நாகராஜ் நடராஜ்)மற்றும் இள சக்திவேல் இப்படி,
எதாச்சும் அதிபுத்திசாலியா பேசி செய்து பல்ப் வாங்கினால் 'மதுரம் பிரபாகரை'
அரசியல் நையாண்டி என்றால் ஸ்ரீதர் சுப்ரமணியம் (பிஜெபிக்கு எதிர்ப்பு காங்குரஸ்க்கு ஆதரவென்றால்), பிரகாஷ் ராமசாமி (பிஜெபிக்கு ஆதரவு காங்கிக்கு எதிர்ப்புன்னா),
நல்ல பெண்களின் போட்டோ மற்றும் மீம்ஸ் என்றால் ராம்ஜி அண்ணா மற்றும் டாக்டர் ராஜன் பி.என்}

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம்: 2020

மீனம்:



மீன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு கூடுதல் நன்மைகளை தரும் வருடமாக இருக்கும்.

மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனி 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் பதினொன்றாமிடத்தில் சனி இருப்பது மீனத்திற்கு மேன்மைகளைத் தருகின்ற

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கும்பம்: 2020

கும்பம்:

கும்ப ராசிக்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு எதிர்காலத்திற்கான மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.
கும்பத்திற்கு தற்போது ஏழரைச்சனி அமைப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் 24-ம்தேதி நடக்க இருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் சனி உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து விரையச்சனி எனும் நிலை பெறுகிறார்.

ஏழரைச்சனி நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது ஜோதிட விதி. ஆயினும் இது போன்ற நேரங்களில் பலன்கள் இரண்டு விதமாக சொல்லப்பட வேண்டும். உங்களில் முப்பது

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் மகரம்: 2020

மகரம்:




மகர ராசிக்கு இந்த வருடம் ஜென்மச் சனி ஆரம்பித்திருக்கும் நிலையில் 2020 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

உங்கள் ராசிக்கான பலன்களை இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லுவேன். அதாவது இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு ஜென்மச் சனி அமைப்பு பொங்கு சனி எனப்படும் இரண்டாம் சுற்றுக்கான நன்மைகளைச் செய்யும். எனவே இளைய பருவத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - தனுசு: 2020

தனுசு:


கடந்த ஐந்து வருடங்களாக ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் தனுசு ராசிக்காரர்கள் முடங்கிப் போயிருக்கிறீர்கள். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தனுசு ராசிக்காரர்களில் மூலம் நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில், பூராடம் நட்சத்திரக்காரர்கள் இன்னும்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - விருச்சிகம்: 2020

விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியாக கடந்த சில ஆண்டுகளாக, உங்களுடைய சிந்தனை, செயல்திறன் ஊக்கம் ஆகியவற்றை முடக்கிப் போட்டு உங்களை பாடாய்ப்படுத்திய ஏழரைச்சனி இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரி 24 முதல் முழுமையாக விலக இருப்பதால் 2020 நல்ல வருடமே.

கடந்த காலங்களில் பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய மனக் கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். விருச்சிகத்தின் கடந்த

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்: 2020

துலாம்:



துலாம் ராசிக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். இந்த வருடம் இருக்கும் கிரக நிலைகள் உங்களுக்கு ஆனந்தத்தையும், லாபத்தையும் தரும் என்பதால் உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல எதுவும் இல்லை.

ஏறத்தாழ வருடம் முழுவதும் கேது மிகவும் நல்ல பலன்களை தரும்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - கன்னி: 2020

கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2020-ம் வருடம் வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களைக் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் வருட ஆரம்பத்தை விட ஆண்டின் பிற்பகுதியில் கிரக அமைப்புகள் நல்லமுறையில் இருப்பதால் உங்களுடைய தொழில்துறை

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - சிம்மம்: 2020


சிம்மம்:



சிம்ம ராசிக்காரர்களுக்கு 2020-ம் வருடம் நல்லபலன்களைத் தரும் வருடமாக இருக்கும். குறிப்பாக சென்ற வருடத்தை விட பொருளாதார மேன்மைகளும் நல்ல பணவரவும் நிலையான வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளும் இந்த வருடம் இருக்கும்.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் நடந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு நல்லவிதமாக அமைந்துள்ள நிலையில், வருட ஆரம்பத்தில் ஜனவரி 24ம் தேதி நடக்க விருக்கும் சனிப்பெயர்ச்சியும் உங்களுக்கு மிகப் பெரிய

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- கடகம்: 2020

கடகம்:



கடக ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2020 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
ஒரு முக்கிய பலனாக வருட ஆரம்பத்தில் இளம் பருவத்தினருக்கு திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். சிலர் இந்த ஆண்டு துவக்கத்திலேயே

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- மிதுனம்: 2020

மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் 2020 புத்தாண்டு நிதானமான பலன்கள் நடக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது.

இந்த வருடத்தின் கிரகநிலைகளை எடுத்துக் கொண்டால் சுபக்கிரகமான குரு வருடம் முழுவதும் ஏழாமிடத்தில் இருப்பது ராசியைப் பார்ப்பது உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. இன்னுமொரு சிறப்பு அம்சமாக அவர் சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கிறார் என்பதால் வருடம் முழுவதுமே குருவின் மூலமாக நல்ல பலன்களும், கேட்கும் இடங்களில் சரியான நேரத்தில்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள்- ரிஷபம்: 2020


ரிஷபம்:



ரிஷப ராசிக்காரர்களுக்கு 2020ம் வருடம் நல்லபலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த மூன்று வருடங்களாக கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத ரிஷபத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

கடந்த மூன்று வருடங்களாக அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான ரிஷபத்தினர் சாதகமற்ற பலன்களை அனுபவித்து வந்தீர்கள். இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் 24ம் தேதி உங்கள் ராசிக்கு

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜின் ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மேஷம்: 2020

-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

 மேஷம்:



மேஷ ராசிக்காரர்களுக்கு 2020 வருடம் நல்ல பலன்களையும், பண வரவுகளையும், தொழில் முன்னேற்றங்களையும் கொடுக்கும். கடந்த வருடம் கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷத்தினருக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டு சிறந்த ஆண்டாக இருக்கும்.

வருட ஆரம்பமே ஒன்பதாமிடத்தில் குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக

மரவள்ளிக்கிழங்கின் மருத்துவ பயன்கள்


மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். எனவே, அவற்றின் பயன் பற்றி பார்ப்போம்.

1. மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

2. இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று

சனி, 7 டிசம்பர், 2019

செல்வம் நிலைக்க -2

"பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்."

வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து 
செலவு வரவு செய்ய வேண்டும்..?
''பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க

கார்த்திகை பிள்ளையார் விரதம்

.

பிள்ளையாருக்கு பல விரதங்கள் கடைபிடித்தாலும்,இந்த கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் விரதம் மிக சிறப்பு வாய்ந்தது!

இதை "குமார சஷ்டி"விரதம் என்பார்கள்.

இந்த விரதம் வரும் பௌணர்மிக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி  அன்று முடிக்க வேண்டும்.

சனியனே என்று ஏன் திட்டக் கூடாது!!


சனியனே மூதேவி என்று திட்டினால் என்ன நடக்கும் என தெரியுமா?*

நாம் பொதுவாகவே, கோபமாக இருக்கும்போது குழந்தைகளையோ, மற்றவர்களையோ சனியனே என்று திட்டிவிடுவோம். ஆனால் அப்படி யாரையும் நாம் சனியனே என திட்டக்கூடாது. அவ்வா
று திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் நினைத்து, சனீஸ்வர பகவான் அவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். அதனால் அவ்வாறு சனியனே என்று திட்ட கூடாது!!!

 *ஆபத்தான சொல்!!*

சனீஸ்வரனை மந்தமான கடவுள் என்று அனைவரும் கூறுவர். அவருக்கு மாந்தன் என்ற பெயரும் உண்டு. மேலும் சனி கிரகம் மற்ற எல்லா கிரகங்களை விடவும் மெதுவாகவே சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அவ்வாறு வருகையில் சனி ஒருவரது எண்ணம், சொல், செயல் என்ற மூன்று விதத்தில் ஆக்ரமிப்பார். ஒருவரது எண்ணத்தில் சனியன் வந்துவிட்டால் அவரது வார்த்தைகளிலும் அதன்
பிரதிபலிப்பு இருக்கும். அந்த வகையில் "சனியனே" என்ற  சொல் மிகவும் ஆபத்தானது. ஒருவரது நாவில் இருந்து அந்த வார்த்தை வந்து விட்டால் சனி அடுத்து அவரது செயலிலும் வந்து விடுவார். இதனால் அந்த நபர் எண்ணிலடங்கா சோதனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்!!!

செல்வம் நிலைக்க தரித்திரம் தீர



1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது.
 கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).

3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

உங்கள் கையில் ஆபாச வீடியோ இருப்பதால் மட்டும் நீங்கள் குற்றவாளி அல்ல

ஊர்கூடித் தேர் இழுப்போமா!

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து ‘ஆபாச வீடியோ பார்ப்போரின் பட்டியல் தயார்…அடுத்து கொத்துக்கொத்தாக கைதுதான்’ என்ற ரீதியில் வரும் செய்திகள்,யூ டியூப் செய்திகளைப் புறம் தள்ளுங்கள். அந்த செய்தியில் இருப்பது கொஞ்சூண்டு உண்மை மட்டுமே.

எங்களது  ‘செல்லமே’ குழந்தை வளர்ப்பு மாத இதழுக்காக காவல் துறை கூடுதல் இயக்குநர் (சிறார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) திரு.ரவி, இ.கா.ப. அவர்களை இன்று சந்தித்தேன். அந்த நேர்காணல் சிறிது நேரத்தில் இணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது. 
நான் பேசியமட்டில் தெரிந்த விஷயங்கள் இவைதாம்:

*அவரது சிறப்புப்பிரிவு, பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே செயல்படுகிறது.

*குழந்தைகளைத்துன்புறுத்தி, வசீகரித்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீடியோக்களைத்தான் இப்பிரிவு கவனம் எடுத்துப் பார்க்கிறது. அதனை உருவாக்கியோர், தவறான நோக்கத்துடன் பரப்புவோர் ஆகியோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதில் மாற்றமில்லை.

*குழந்தைகளை அவ்வாறு சிந்தித்துப்ப்பார்க்கவே சிலரால்தான் முடியும். மனப்பிறழ்வு கொண்டவர்கள் அவர்கள். அதற்குத்தான் சிகிச்சையோ/தண்டனையோ தேவை.

வியாழன், 5 டிசம்பர், 2019

நாம் செய்யக்கூடாதவை !!!!

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர்கள் ..(பண்ணவும் நினைக்காதீர்கள்)

2. முடிந்தவரை  அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்கள் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ...

கார்த்திகை மாதத்தின் சிறப்பு என்ன?




கார்த்திகை மாதத்தின் சிறப்பையும், இந்த மாதத்தில் வணங்க வேண்டிய தெய்வ வழிபாடுகள் பற்றிய 51 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.


1. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

2. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

3. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

4. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள்

செவ்வாய், 19 நவம்பர், 2019

மகேந்திரசிங் தோனி ஜாதக ஆய்வு


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 1981-ம் வருடம்,ஜூலை மாதம்,7-ந்தேதி காலை 11-15 மணிக்கு பிறந்தவர்.இவருடைய நட்சத்திரம் உத்திரம்,ராசி கன்னி,லக்கினமும் கன்னி.ராசியும்,நட்சத்திரமும் ஒரே அமைப்பாக சில பேருக்குதான் இந்த் மாதிரியான அமைப்பு இருக்கும் இது சிறப்பான அமைப்பாகும்.

இவர் 7-ம் எண்ணாகிய கேது ஆதிக்கத்தில் பிறந்துள்ளா இந்த கேது ஞானக்காரகன் எந்த சந்தர்ப்பத்திலும் அலட்டிக்கொள்ளாத மனநிலையை கேது கொடுக்கக்கூடியவர்.

நட்சத்திரங்களிலேயே உத்திரம் நட்சத்திரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு

திருமணம தோஷங்கள்

எந்த ஒரு ஜாதகருக்கும் / ஜாதகிக்கும் - திருமண விஷயமாக பார்க்கும்போது - மூன்று வித தோஷங்கள் ஆராயப்படுகின்றன . சர்ப்ப தோஷம் . செவ்வாய் தோஷம் அடுத்து புனர்பூ.முதல் இரண்டு தோஷங்களும், எல்லா ஜோதிடர்களுக்கும் அத்துபடி. 
அதனாலே , அந்த ரெண்டைப் பத்தி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.இப்பொழுது பார்க்கவிருப்பது புனர்பூ .

ஒரு சில ஜாதகர்களுக்கு - பொருத்தம் பார்க்கும்போது , கொஞ்சம் ஓரளவுக்கு பொருந்தி , பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே , திடீரென்று - பொருத்தம் பார்க்கப் பட்ட ஜாதகருக்கு , வேறு ஒரு இடத்தில் நல்ல வரன் வந்து , டக்குனு , முடிஞ்சு கல்யாணமே முடிந்து போகும்... கவனித்து இருக்கிறீர்களா ?

லட்சுமி-சிறுகதை

புருசன் செத்துட்டான்
பொட்டப்புள்ளையை காப்பாற்ற 
புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது லெட்சுமி

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான்
பர்மிசன் யார்கிட்ட கேட்ட
மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு
எதையாவது சொல்லிதினமும் 
ஓசியில வயிறுமுட்ட தின்பான்

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள்
இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும்....
அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் லெட்சுமி

ஆனால் இந்த
ஓசிபோலீஸ் ஒருதோசை
குறைவாக சாப்பிடமாட்டானா
என நினைத்தால் 
அவன்தான் ஆறஅமர உட்கார்ந்து
நிறைய தின்னுட்டு 
பார்சலும் வாங்கிட்டு போவான்....

கிராமத்து கோழிக் குழம்பு

சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம். இப்போது அதில் பாரம்பரிய கிராமத்து முறையில் செய்வது எப்படி என்பதைத் தான் படிக்கப் போகிறோம். இந்த குழம்பின் ஸ்பெஷல் சிக்கனை நன்கு ஊற வைத்து சமைப்பது தான். 

மேலும் இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வதால் இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். ஓகே இப்போது அந்த சிக்கன் குழம்பை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ளலாமா..




தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2 இன்ச்