எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 23 மார்ச், 2020

மீன் பிரியாணி!

தேவையான பொருட்கள்:

2 சுண்டு பசுமதி அரிசி
900 மி.லீட்டர் தண்ணீர் (800 மி.லீட்டர் தண்ணீர் + 100 மி.லீட்டர் தேங்காய்ப்பால்)
100 மி.லீட்டர் தண்ணீர் (மசாலா அவியவிட)
3 மே.கரண்டி எண்ணை
1 தே.கரண்டி கடுகு
1 தே.கரண்டி சின்னச்சீரகம்
3 ஏலக்காய்
1 மே.கரண்டி மிளகு (விரும்பினால்)
1 அன்னாசிப்பூ
1 துண்டு கறுவாபட்டை
5 கராம்பு
2 பிரியாணி இலை
300 கிராம் வெங்காயம்
3 தக்காளி
1/2 உள்ளி
1/2” இஞ்சி
1/2 - 1 மே.கரண்டி கரம்மசாலா
1 மே.கரண்டி செத்தல்தூள்
1 மே.கரண்டி மல்லித்தூள்
1/2 மே.கரண்டி சீரகத்தூள்
1/2 தே.கரண்டி மஞ்சள்
உப்பு
கறிவேப்பிலை
1 சிறங்கை மல்லிஇலை
புதினாஇலை (விரும்பினால்)
3 பச்சைமிளகாய் (விரும்பினால்)

மீன் மசாலா:
500 கிராம் மீன்
1/2மே.கரண்டி செத்தல்தூள்
உப்பு
1/2 தே.கரண்டி மஞ்சள்
தேசிப்புளி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து “மீன் மசாலா” பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அரிசியைக் கழுவி தண்ணீர் விட்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
ஊற வைத்த மீனை பொரித்து எடுக்கவும்.

இஞ்சி மற்றும் உள்ளியை அரைத்து அல்லது இடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான தீயில் சூடகாக்கவும். அதில் கடுகு, சின்னச்சீரகம், ஏலக்காய், மிளகு, அன்னாசிப்பூ, கறுவாபட்டை, கராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போடவும். கடுகு வெடிக்கத் தொடங்கும் போது அதில் வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதனுடன் இஞ்சி உள்ளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக வெட்டி வைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் செத்தல்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் 100 மி.லீட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளிக்கலவையில் விட்ட தண்ணீர் வற்றி பிரண்டு வரும் பொழுது, அதில் தண்ணீர், தேங்காய்ப்பால், கரம்மசாலா, மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கலக்கவும்.

அரிசியைச் சேர்த்துக் கலந்து உப்பு சுவை பார்த்து, பச்சை மிளகாய் மற்றும் மீன் துண்டுகளை அரசியின் மேல் வைத்து மூடி அவிய விடவும்.
அதி கூடிய வெப்பத்தில் 3 நிமிடங்களும், அடுத்ததாக அளவான வெப்பத்தில் 3 நிமிடங்களும் அவிய விட்டு, அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். அல்லது மிதமான தீயில் அரிசி அளவிற்க்கு தண்ணீர் வற்றும் வரை அவிய விட்டு அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். விரும்பினால் கலந்து பரிமாறவும்.
சுடச் சுட மீன் பிரியானி தயார்!

குறிப்பு:
1 பங்கு அரிசிக்கு 1 1/2 பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
தேங்காய்ப்பாலின் அளவை விரும்பிய அளவில் கூட்டிக் குறைக்களாம். ஆனால் அவிய விடும் பொழுது தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலின் அளவு, அரிசியின் அளவில் 1 1/2 மடங்காக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக