எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

புதன், 16 நவம்பர், 2016

4ஜி Smart போனை அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!

4ஜி இண்டர்நெட் சேவையை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடி தகவல் வழங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி ரிலையன்ஸ் ஜியோ மலிவு விலையில் ஸ்மார்ட்போன் கருவிகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.


ஸ்மார்ட்போன்

முன்னதாக வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பீச்சர் போன்களை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகத் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல் தெரிவிக்கின்றன.

   

விலை

மலிவு விலை கருவி என்பதால் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி கருவியின் விலை ரூ.1,000/- அல்லது ரூ.1,500/- வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

   

தட்டுப்பாடு

4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் கருவிகளை வெளியிட ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

   

லைஃப்

ரிலையன்ஸ் லைஃப் பிரான்டு 4ஜி திறன் கொண்ட கருவிகளை ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றது. இவை மற்ற நிறுவன கருவிகளை விடக் குறைவான விலையில், துவக்க விலை ரூ.2,999 முதல் கிடைக்கின்றது குறிப்பிடத்தக்கது.

   

அம்சங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வெளியிட இருக்கும் கருவியானது ரூ.1,000 விலை கொண்டிருக்கும் என்றாலும் இதில் ஸ்ப்ரெட்ரம் 9820 பிராசஸர், அதிகத் திறன் கொண்ட கேமரா, பெரிய டிஸ்ப்ளே, வை-பை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

திங்கள், 14 நவம்பர், 2016

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் இதனை செய்து பயன்பெறலாம்.

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

* ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து அதை மிதமாக சூடுபடுத்தவும்.

* மிதமாக சூடேறிய எண்ணெயில் தேவையான அளவு மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடங்கள் சூடாக்கி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

* சூடு ஆறிய எண்ணையை இரு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூச வேண்டும்.

* இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.

* இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

குறிப்பு : இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது. சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி!

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்

பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.

எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.

இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.

அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்


அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.


அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.


உலகம் முகம் கொடுக்கும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய எரிபொருள் காணப்படும் என இலங்கை விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




திருமணம் ஆனவர்கள் மட்டும் இதை படிக்கவும்.

உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, காய்ச்சல், சளி போன்ற நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

14 நாளில்

பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20% பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி செய்த_பின்னர்

உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

மன உளைச்சல்

ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது

உடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.



இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர்.

இச்செயலால் நிறைய பெண்களும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலுறவிற்கு பின்னான கொஞ்சல்கள் மிகவும் முக்கியமானது. இதை ஒவ்வொரு ஆண்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னணியில் நிறைய காரணங்களும் உள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஹார்மோன் வெளியீடு

உச்சக்கட்ட இன்பத்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். அதுவே பெண்ணிடம் என்றால் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும்.

ஹார்மோன் அதிகமாக சுரக்கும் தருணம்

உடலுறவு கொண்டு உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது மட்டும் தான் பெண்களின் உடலில் நல்ல மனநிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்காதீர்கள். உடலுறவுக்கு பின்னும் அப்பெண்ணிடம் அந்த ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும்.

ஹார்மோன் செயல்

பெண்களின் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதியருக்குள்ளான பந்தத்தை வலுப்படுத்தும். தம்பதிகளுக்குள் பந்தம் வலிமையடையும் போது, ஒரு பெண்ணின் மனம் குழந்தையைச் சுமக்க தயாராகும். இப்படி நேர்மறை எண்ணங்கள் உடலில் அதிகரிக்கும் போது, வேகமாக கருத்தரிக்கக்கூடும்.

இதர நன்மைகள்

உடலுறவுக்கு பின் ஆண்கள் மனைவியைக் கொஞ்சுவதால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். அதில் பெண்களின் இனப்பெருக்க சுழற்சி சரியாக நடைபெறும், குழந்தை உருவாக உதவியாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் உற்பத்தி சுழற்சி சரியாக தூண்டப்படும்.

பாதுகாப்பு மற்றும் சௌகரியம்

முக்கியமாக உடலுறவு கொண்ட பின் துணையுடன் கொஞ்சி விளையாடுவதால், அப்பெண் நல்ல பாதுகாப்பையும், சௌகரியத்தையும் உணர்ந்து, எளிதில் கருத்தரிக்க உதவும். அதுமட்டுமின்றி, அது இருவருக்கும் ஓர் நல்ல தருணமாகவும் இருக்கும்.


ஆண்மை தன்மை அதிகரிக்க செய்யும் வாழைப்பூ!

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை



சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

இதேபோல் இரத்த மூலத்தால் மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும்.. இந்த நோய் கண்டவர்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறைந்து. விடும்

வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்குகின்றது.

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும் மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக ரத்த போக்கு உண்டானால் அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் ரத்தபோக்கு கட்டுப்படும். மேலும் உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்..

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் நிச்சயம் பெறுவர்.


ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்!

தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது



என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.

அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.

மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும்.

சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.

மிளகு தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மஞ்சள் தண்ணீர்

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

எலுமிச்சை தண்ணீர்

ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சீடர்

வினிகர் காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

குளோரெல்லா தண்ணீர்

இந்த பானம் உடலில் உள்ள நச்சுமிக்க மெர்குரிகளை வெளியேற்றி, உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களைப் புதுப்பித்து, உடல் பருமன் குறைய உதவும். அதற்கு ஒரு டீஸ்பூன் குளோரெல்லா பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது குளோரெல்லா மாத்திரை கிடைத்தால், தினமும் ஒன்றை வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ளலாம்.


RAM இல்லாமலே நமது கணினியின் வேகத்தை அதிகரிக்க..!!

personal computerகணிணியின் முதன்மை நினைவகமே RAM என்றழைக்கப்படும். இதன் விரிவாக்கம் Random access memoryஎன்பது. இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். Virtual memory தான் நம்முடைய கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி ஆகும்.

பொதுவாக இதன் திறன் அல்லது கொள்ளவு 512 MB, 1GB என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் 2GB, 8 GB என்ற வகையில் இருக்கிறது.. இப்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான அதிகபட்ச கொள்ளவு திறன்கொண்ட Ram-ம் வந்துவிட்டது.


Ram -ன் பயன்பாட்டைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். RAM எதற்கு என்றால், நாம் ஒவ்வொரு முறையும் கணினியில் Hard Disc சென்று தகவலைப்பெற நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், விரைவாக கணினியில் தகவலைப்பெறவுமே இந்த RAM -ஐ கணினியில் இணைக்கிறோம்.
ddr ram

RAM ஆனது Hard disc லிருந்து குறிப்பிட்ட அளவு தகவல்களை பெற்று தன்னுள் இருத்தி நமக்கு விரைவாக தகவல்களை அளிக்கிறது. இதனால்தான் கூடுதலாக நாம் கணினியில் RAM ஒன்றை இணைத்திருப்போம்.. இதனால் கணினியின் வேகம் கூடுவதோடு நமக்குத் தேவையான தகவல்களும் உடனுக்குடன் கிடைக்கிறது.

இதையும் மீறி கணினியின் வேகம் குறைந்தால் அதற்கு ஒரு மாற்றுவழியாக இதைச் செய்யலாம். அதாவது நமது ஹார்ட் டிஸ்கின் Space அதிகமாக இருந்தால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நினைவகத்தை RAM போன்றே மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்.

செய்முறை:-

1. முதலில் XP யின் My computer செல்லவும்.
2. properties
3. system properties தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் விண்டோஸ் விஸ்டா (Windows vista) உபயோகிப்பாளராக இருந்தால்  Control panel==>Properties==> Performance Option ==>Advance system setting==> Setting ==> setting==>Advanced தேர்வு செய்யவேண்டும்.

பிறகு

Virtual memory ==> Automatically manage paging file size for all drives தேர்வு செய்யுங்கள். அங்குள்ள Check box கண்டிப்பாக டிக் செய்யுங்கள்.

பிறகு, எந்த டிரைவில் உங்களுக்கு அதிக ஸ்பேஸ்(sapce) இருக்கிறதோ அந்த டிரைவை தேர்வு செய்யவும். உதாரணமாக நம் கணினியில் C drive, D drive, E drive என்ற நேமிங் இருக்கும். அதில் உங்களுக்கு அதிக காலியிடம் உள்ள டிரைவ்-ஐ தேர்வு செய்யவும். எடுத்துக்காட்டாக C, அல்லது D அல்லது E தேர்வு செய்யவும்.

நீங்கள் C drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் . .

அங்கு custom managed size என்பதை செலக்ட் செய்து Initial Size மற்றும் Maximum Size ஆகியவைகளை MB அளவுகளில் கொடுத்துவிட்டு "Set" என்பதை கிளிக் செய்யுங்கள். முடிந்தது.

இனி உங்கள் கணியின் virtual memory அதிகரித்துவிட்டது. என்ன நண்பர்களே செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் கேளுங்கள்..!!

மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பின்னூட்டம் எனது முன்னேற்றம்..!! நன்றி நண்பர்களே..!!


இந்தப் பதிவு பயன்மிக்கதாக இருந்ததா? மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள். உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்..!! நன்றி நண்பர்களே..!!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! கணிணிக்குறிப்புக்கள்!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....

PAN CARD கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.!

  1. நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான் கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.



1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் முதிலீடு செய்வ தற்கும் அடிப்படைத் தேவை ஆகி விட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம் பளம் கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
3. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. அதற்கு என்ன செலவாகும்?
இதற்காக ரூபாய் 94/- NRIகளுக்கு ரூபாய் 744/-மட்டுமே செலவாகும். புரோக்கர் மூலமாக ரூபாய் 250/-முதல் செல வாகு ம்.
5. PAN CARD – ன் அவசியம்:
1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்குமேல் வங்கியில் Fixed Deposit செய்யும்போது அவசிய ம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கி ல் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000 தாண்டும் போது அவசிய ம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8)தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதி க்கு செலுத்தும் கட்டணம் ரூ. 25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிக மாக செலுத்தும் போது அவசி யம்.
10) வருமான வரி ரிட்டன தாக் கல் செய்ய அவசியம்.
11)சேவை வரி மற்றும் வணிக வரி துறையில் பதிவு சான்று பெற Pan Card கட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடுசெய்யும் போதுதான் பான்கார்டு அவசிய மிருந்தது. ஆனால், தற்போ து எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண் டும்.
மேலும், மைனர்பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டு ம். இதற்காக, தற்போது மைனர்களு க்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.
இதனால் அனைவரும் அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பான் கார்டு பெறுவது என்பது கடினமான காரியமாகச் சிலர் நினை க்கின்றனர். சிலர் இந்தச் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக் கொண்டு, பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிக மான கட்டணத்தை வசூலித்து கொள்ளை லாபம் அடித்தும் வரு கின்றனர்.
“மத்திய அரசு 2007 ஜனவரி முதல் தேதிக்குப் பிறகு வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்படும் அனைத்து ரிட்டன்களுக் கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கும் பான் கார்டு எண் ணைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக் கியுள்ளது.
மேலும், இந்தக் கார்டை வாங்கி னால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமான வரிசெலுத்த வேண்டி யிருக்குமோ என்ற ஒருவித அச்சமும் மக்கள் மனதில் எழுந் துள்ளது. உண்மையில், பான் கார்டு வாங்குவதால் வருமான வரி கட்ட வேண்டிய அவசியம் கிடையாது. அனைவரையும் வருமானவரம்புக்குள் கொண்டு வருவதற் காகவே இந்த பான்கார்டு கட்டா யமாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெறுவதற்கான நடை முறைகள் தற்போது மிகவும் எளி தாக்கப்பட்டுள்ளது.
பான்கார்டு பெற விரும்புவோர்:
வருமான வரித்துறையின் Form 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் முகவரிக்கான சான் றிதழை இணைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தை
http://www.utitsl.co.in/pan
(or)
www.tin-nsdl.com
(or)
www.incometaxindia.gov.in,
ஆகிய இணையத்தளங்களின் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் வருமான வரித்துறையின் ஐடி பான் சர்வீசஸ் மையத்தி லும், டிஐஎன் மையங்களிலும் இதைப் பெறலாம்.
அப்ளை செய்யப்பட்ட கார்டி-ன் Status அறிய
இதற்கு கீழ்கண்ட அடையாள சான்றிதழ்களில் சில அவசியம்.
விலாசம் தொடர்பாக கீழ்கண்ட சான்றிதழ்களில் சிலவும் அவசியம்.
1. பள்ளி டிசி 1. மின் கட்டண ரசீது
2. பிளஸ் டூ சான்றிதழ் 2. தொலைபேசி கட்டண ரசீது
3. கல்லூரி் சான்றிதழ் 3. வங்கிக் கணக்கு விவரம்
4. வங்கிக் கணக்கு விவரம் 4. வீட்டு வாடகை ரசீது
5. வாட்டர் பில் 5. பாஸ்போர்ட்
6. ரேசன் கார்டு 6. ரேசன் கார்டு
7. வீட்டு வரி ரசீது 7. வாக்காளர் அடையாள அட்டை
8. பாஸ்போர்ட் 8. வீட்டு வரி ரசீது
9. வாக்காளர் அட்டை 9. ஓட்டுனர் உரிமம்
10. ஓட்டுனர் உரிமம் 10.பணியாற்றும் நிறுவனத்திடம் பெறும் கடிதம்
விண்ணப்பிப்பவர் 18 வயதுக்குக் குறைவான மைனராக இருந்தா ல், அவரது பெற்றோர் அல்லது கார்டியனின் சான்றிதழ்களே போ துமா னவை.
உங்களிடம் பான் கார்ட் இருந்து அது குறித்த மேலும் விவரங்களைப் பெற என்ற இணை யத்தளத்தை நாடலாம்.
சிலருக்கு வருமான வரித்துறை தானாகவே இந்த அட்டையை வழங்கும்.
ஒரு தனிப்பட்ட நபர் வரி செலுத்தினாரா, வரிப் பிடித்தம் நடந்ததா, அவரது வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றம் உள்ளிட்ட விவர ங்களை வருமான வரித்துறை பெற பான்கார்ட் உதவுகிறது.
பான் கார்டில் உள்ள எண்- எழுத் துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறி யீடாகும். அதைத் தெரிந்து கொள் வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக் கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப் பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டாஎன்பதை குறிக்கிறது.
C – Company
P – Person
H – HUF(Hindu Undivided Family)
F – Firm
A – Association of Persons (AOP)
T – AOP (Trust)
B – Body of Individuals (BOI)
L – Local Authority
J - Artificial Juridical Person
G – Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும். அடுத்துவரும் எண்கள் வரிசை எண்களாகு ம். இது 0001ல் ஆரம்பித்து 9999வரை செல்லும். கடைசி எழுத்து ம் வரிசை எண் தொடர்புடையதுதான்
மத்திய வருமான வரித்துறை அலுவ லகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்க ப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமி னேட்கார்டை பெறவேண்டும் என விரும் பினால் மட்டும் புதிதாக விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பெறும்போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதே போல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றா லோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. எனவே, அதை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்,,

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!



ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.




ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!

யுத பூஜை அன்று அனைவரும் கார், பைக்கை எல்லாம் குளிப்பாட்டுவார்கள் என தெரிந்ததோ என்னவோ, என் செல்லக்குட்டி ராகவன், காலையிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் என் ஸ்மார்ட் போனை குளிப்பாட்டிட்டான்.

விளைவு, போனுக்கு ஜலதோஷம், எனக்கு வீட்டிலேயே பூஜை... போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;

திருதிரு-னு முழிச்சுட்டு இருக்கும் போதுதான் ஆபத்பாந்தவன் Google - ஞாபகம் வந்தது.

இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்கு phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என அம்மா கேட்க, phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, 'திக்திக்' மனதோட அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.

WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.

எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும் என நினைத்து Share செய்தேன்.


ஃபேஸ்புக் இம்சைகளில் இருந்து தப்பிக்க... இதைச் செய்யுங்கள்!




ன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எல்லாருமே சமூக வலைதளங்களில் தான் எப்போதும் மூழ்கியிருக்கிறோம், அலுவலகத்தல் இருந்தாலும் குறைந்தது ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையாவது என்ன ஸ்டேட்டஸ் ட்ரெண்டில் ஓடிகொண்டிருக்கிறது, யார் நமக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், என்று மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தான் வேலையே செய்ய ஆரம்பிப்போம். சமூக வலைதளங்களில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு மட்டுமே உலகத்தில் பெரும்பாலான மக்களை தன்னுள் மூழ்கி கிடக்க வைத்துள்ளது.

என்னதான் வாட்ஸ்அப் அதிவேகமாக செய்திகளை பரப்பிவந்தாலும், இளைய தலைமுறையினருக்கு பிடித்திருந்தாலும், அதிக மக்களுக்கு பிடித்ததென்னவோ ஃபேஸ்புக் தான். காரணம், தனது மகிழ்ச்சியை, துன்பத்தை, கொண்டாட்டங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் லைக்ஸ், ஷேர், எண்ணிக்கை வரம்புமுறையற்ற வார்த்தைகள், கமெண்ட்ஸ் ஆகிய பயன்பாடுகள் தருவதாலையே ஃபேஸ்புக் அனைவருக்கும் பிடித்து போய் விட்டது. இதனால் நாம் ஃபேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்த எண்ணுகிறோம், அப்படி இருந்தும் சில சமயங்களில், ஃபேஸ்புக் விளம்பரங்கள், தேவையற்ற நேரத்தில் சாட் அழைப்புகள், போன்றவை நம்மை எரிச்சலின் உச்சத்திற்க்கே கொண்டுசெல்லும், அப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு வேண்டியவர்கள் சாட் செய்தாலே கோபம் வரும், இது போன்ற ஃபேஸ்புக் இம்சைகளை சில டெக்னிக் முறைகளை வைத்து வெகு சுலபமாக கையாளலாம்.

1. உங்களை கடுப்பேற்றும் ஃபேஸ்புக் விளம்பரங்களை தடுப்பது எப்படி?

ஃபேஸ்புக் செட்டிங்க்ஸ்-ல் சென்று இடதுபுற ஓரத்தில் உள்ள Ads- ஐ கிளிக் செய்து படம் 1-a வில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் எடிட் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.



பின்பு படம் 1-b யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் Choose Settings - இல் off ஆப்ஷனை தேர்வு செய்து save செய்துவிட வேண்டும். 

2. சாட் செய்யும் போது 'seen' வார்த்தையை மறைப்பது எப்படி?

சிலரின் மெசேஜ்கள் நம்மை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்லும், எப்போது பாத்தாலும் மெசேஜ் செய்துகொண்டே இருப்பார்கள், நாம் பிஸி என்று சொன்னால் கூட விடமாட்டார்கள், ஆனால் அத்தகைய அனைவைரையுமே நண்பர்கள் பட்டியலை விட்டு நீக்கமுடியாது. அவர்கள் அனுப்பும் மெசேஜை பார்த்துவிட்டால், அவர்களுக்கு 'seen' காண்பித்துவிடும், நான் அனுப்புற மெசேஜை படிக்கிற ஆனா ரிப்ளே பண்ணமட்டேங்குற... அப்படின்னு சொல்லி நம்மை சாகடித்துவிடுவார்கள், அப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு எளிய வழி உள்ளது.

முதலில் உங்கள் கூகுள் குரோம் பிரவுசரில் ctrl+h கொடுத்து extension-ஐ படம் 2-b(a)மற்றும் 2-b(b) யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் தேர்வு செய்துகொள்ளுங்கள்.







அதன்பின் வரும் extension search - இல் படம் 2-b(c)யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் facebook unseen என்று தேடினால், chrome unseen extension கிடைக்கும், இதனை படம் 2-b(d)மற்றும் 2-b(c)யில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். 

தற்போது உங்கள் உலாவியின் வலதுபுற மேல் ஓரத்தில் நீல நிற சிறிய பாக்ஸ் ஒன்று படம் 2-d யில் காட்டியுள்ளது போல் இருக்கும். 

அவ்வளவுதான் இனி நீங்கள் யாரவது மெசேஜ் செய்தால், அந்த மெசேஜை படித்தால் அவர்களுக்கு தெரிந்துவிடும் என்ற கவலையே வேண்டாம், அவர்களுக்கு 'seen' காண்பிக்காது.

3. பெர்சனல் தகவல்களை மறைத்தே வைத்திருங்கள்:

உங்களுடைய பெர்சனல் தகவல்களை படம் 3-a வில் காட்டப்பட்டதுப்போல் எப்போதும் மறைத்தே வைத்திருங்கள் இது உங்கள் பாதுகாப்பிருக்கும், உங்களின் ஃபேஸ்புக் பாதுகாப்பிற்கும் மிக சிறந்தது.


4. குரூப் பிளாக் செய்துவிடுங்கள்

படம் 4-a வில் காட்டப்பட்டுள்ளதுப் போல் Advanced Chat Settings - இல் உங்களுக்கு மெசேஜ் செய்து தொல்லை கொடுக்கும் நபர்களை குரூப் பிளாக் செய்துவிடுங்கள்.

பயனுள்ள பலரும் அறிந்திராத வாட்ஸ்ஆப் தந்திரங்கள்.!!இதில் இப்படியெல்லாம் இருக்கா!!


வாட்ஸ்ஆப் செயலிக்கு முன்னுரை தேவையில்லை. உலக அளவில் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது வாட்ஸ்ஆப். இதன் மூலம் மெசேஜ், வீடியோ மற்றும் படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த செயலியைல் பல அம்சங்கள் இருக்கின்றது. இதில் குழுவாக மெசேஜ் அனுப்பும் ஆப்ஷனும் உள்ளது. ஒரே மெசேஜை பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி இதில் உள்ளது. இதே போல் இந்த செயலியில் உங்களுக்கு தெரிய வேண்டிய தெரியாமல் சில அம்சங்களும் இருக்கின்றது.
குழு பேச்சுக்கான அறிவிப்பை நிறுத்தவும்
சில நேரங்களில் க்ரூப் சாட் நம்மை எரிச்சல் அடைய செய்யும். வாட்ஸ்ஆப் செயலியில் க்ரூப் சாட் ஆப்ஷனை சில மணிநேரத்திற்கு ம்யூட் செய்யும் வசதி உள்ளது. இந்த ஆப்ஷனை செயல்படுத்தினால் குறிப்பிட்ட குழுவிற்கு குறுந்தகவல் பரிமாற்றம் நடைபெற்றாலும் நோட்டிபிகேஷன் ஏதும் வராது.
இந்த ஆப்ஷனை பெற க்ரூப் சாட் மெனுவை தட்டி Menu > hit Mute > choose the time-frame என்பதை பின்பற்றவும்.சில நேரத்திற்கோ அல்லது சில காலத்திற்கு நீங்கள் ம்யூட் செய்து கொள்ளலாம். அல்லது அறிவிப்பு மையத்தில் இருந்தே நேரே நீங்கள் mute செய்ய முடியும்.
இது வெப் பிரவுஸரில் செயல் புரியும். iOSஇல் group chat சென்று group info திரையை பெற குழு சப்ஜெக்டை தட்டவும். பின்பு muteஐ தேர்வு செய்யவும். நீங்கள் mute செய்ய வேண்டிய மணி துளியை தேர்வு செய்தல் அவசியம்.
க்ரூப் சாட்டில் உங்கள் தகவலை படித்தது யார்
ஒருவர் உங்கள் தகவலை படித்தார்களா இல்லையா என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள முடியும். இதை நிச்சயம் செய்ய இரண்டு ப்ளூ டிக் கிடைக்கும். இதுவே க்ரூப் சாட் என்றால் இவ்வாறு தெரிந்து கொள்ள முடியாது. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் யார் தகவலை படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.
நீங்கள் அனுப்பிய தகவலின் மீது நீண்ட நேரத்திற்கு அழுத்தவும். டெக்ஸ்டின் அருகில் வட்ட வடிவத்தால் சூழப்பட்ட “I” என்பது வருகின்றதா என்று பாருங்கள். ஐகானை அழுத்தினால் யாருக்கு மெசேஜ் சென்றது யார் படித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். iphoneஇல் மெசேஜை இடதில் இருந்து வலது பக்கத்திற்கு ஸ்வைப் செய்தால் அறிந்து கொள்ள முடியும்.
புகைப்படம் கேலரியில் தோன்றுவதை நிறுத்தவும்
வாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு தேவையற்ற படங்கள் வந்தால் அவை உங்கள் கேலரியில் தோன்ற வேண்டாம் என்று நினைத்தால். File explorerஐ டவுன்லோட் செய்து நிறுவி கொள்ளவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெரும் ES file explorer போன்று. இப்பொழுது ஆப்பை திறந்து sdcards/WhatsApp/Media சென்று பின் WhatsApp Images செல்லவும். புதிய ஃபோல்டர் ஒன்றை உறுவாக்கி nomedia என்று புதிய பெயர் சூட்டவும்.
வாட்ஸ்ஆப் சாட் வரலாற்றை அணைக்க
கூகுள் டிரைவில் எல்லா சாட்களையும் பேக்கப் செய்யும் ஆப்ஷன் உள்ளது. போனை ஆன் செய்யும் போது எல்லா தரவுகளையும் மீண்டும் பெற முடியும். இதற்கு WhatsApp >> Settings >> Chats and calls >> Backup chats என்பதை பின்பற்றவும். இப்பொழுது புதிய டிவைஸில் whatsappஐ நிறுவவும். அவ்வளவுதான்.
கடைசியாக பார்த்தவை, ப்ரோஃபைல் படம் மற்றும் ஸ்டேட்டஸ் மறைக்க
நீங்கள் கடைசியாக பார்த்த போட்டோ மற்றும் ஸ்டேட்டஸை மறைக்க வேண்டுமா. இதற்கு Settings >> Account >> Privacy என்பதை பின்பற்றவும். கடைசியாக பார்த்த படங்கள், ப்ரோஃபைல் போட்டோ போன்றவற்றை பார்த்து எவ்வளவு பிரவைஸி வேண்டும் என்பதை தீர்மாணித்து கொள்ளுங்கள்.
சாட் ஹோம் திரையை உருவாக்க
சில நண்பர்களுடன் அடிக்கடி உரையாட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அதற்கான ஷார்ட்கட்டை பெற முடியும். உரையாடலை தட்டி பிடிக்கவும். உங்களுக்கு அப்ஷன்களின் பட்டியல் கிடைக்கும். அதில் Add conversation short cutஐ தேர்வு செய்யதால் வேலை முடிந்தது.
டெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற
வாட்ஸ்ஆப் தானியங்கியாக உங்கள் மெசேஜ்களை பேகப் செய்யும். நீக்கிய மெசேஜை பெற வாட்ஸ்ஆப் நிறுவியதை நீக்கி whatsapp setupஐ திரும்ப நிறுவவும். அப்பொழுது backup of your chats அதாவது சாட்களை திரும்ப பெற வேண்டுமா என்ற அறிவிப்பை க்ளிக் செய்யவும். இதை செய்து டெலீட் செய்த மெசேஜை திரும்ப பெற முடியும்.
ஒரே நேரத்தில் பலருக்கு விரைவாக மெசேஜ் அனுப்பும் வசிதி
வாட்ஸ்ஆப்பில் broadcast message என்ற சேவையில் உள்ளது. More menu ஆப்ஷனில் உள்ள broadcast message என்ற ஆப்ஷனை தேர்வு செய்து நீங்கள் அனுப்ப வேண்டிய தொடர்புகளை தேர்வு செய்யவும். இப்பொழுது மெசேஜை டைப் செய்து send செய்யவும்.
உங்கள் போன் எண்ணை மாற்றவும்
நீங்கள் உங்கள் போன் எண்ணை மாற்றி விட்டீர்களா ரீஇன்ஸ்டால் செய்யாமல் உங்கள் எண்ணை மாற்ற வழி உள்ளது. இதற்கு Settings > Account > Change number என்பதை பின்பற்றவும். மேலே உங்கள் பழைய எண்ணை எண்டர் செய்து கீழே புதிய எண்ணை எண்டர் செய்து done என்பதை அழுத்தவும். பின்பு சரிபார்க்கும் செயலை பின்பற்றவும்.
வாட்ஸ்ஆப் உரையாடலின் வரலாற்றை ஒருவருக்கு அனுப்ப
முழு உரையாடலின் வரலாற்றை மின்னஞ்சல் மூலம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப முடியும். ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு Menu->More->Email Conversation என்பதை பின்பற்றவும். யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் மின்னஞ்சல் விலாசத்தை சேர்க்கவும்.

பைல்களை பேக் அப் செய்திடுவோம்!


'நாம் உருவாக்கும் பைல்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைந்து விடும். இவற்றிற்கு பாதுகாப்பாக நகலிகளை எடுத்து வைக்க வேண்டும்' என்ற எண்ணம் நம் மனதின் ஓரத்தில் எப்போதும் இருந்து கொண்டே உள்ளது. ஆனால், நாம் அவற்றிற்கான பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்கிறோமா என்றால், பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள். இதற்குக் காரணம், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் இன்னும் பல ஆண்டுக்கு நம்மை கைவிடாது என்று பல ஆண்டுகளாக அனைவரும் எண்ணுவதுதான். ஆனால், திடீரென ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய், அத்தனை டேட்டா பைல்களும் நமக்கு இல்லை என்ற நிலை வரும்போதுதான், தலையில் கை வைத்து புலம்பத் தொடங்குகிறோம்.
ஆனால், கண்ணும் கருத்துமாகப் பணியாற்றுபவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டா பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைக்கின்றனர். ஒரு சிலரோ, எனக்கு ஆவலாக உள்ளது. ஆனால், என்ன செய்திட வேண்டும்? எது எளிதான வழி எனத் தெரியவில்லையே என்ற கேள்விகளுடன் எதுவும் செய்திடாமல் இருந்து விடுகின்றனர். இவர்களுக்கான கட்டுரையே இது.
முன்பெல்லாம், பேக் அப் என்பது எப்படி எடுக்க வேண்டும், எதில் பேக் அப் பைல்களை வைக்க வேண்டும், எந்த பைல்களை எடுக்க வேண்டும் என்பதெல்லாம், மிகப் பெரிய சவாலான செயலாக இருந்தது. இப்போதைய கால கட்டத்தில், நமக்குக் கிடைக்கும் சாப்ட்வேர் வசதிகள், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தேக்ககங்கள் ஆகியவை பேக் அப் பணிகளை எளிதாக மாற்றியுள்ளன. இப்போதும் நாம் அவற்றைப் பயன்படுத்தி, பேக் அப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், நம்மிடம் தான் குறை உள்ளது. இங்கு, எப்படி, எந்த வகைகளில் பேக் அப் செய்வது என்பது குறித்துப் பார்க்கலாம்.
எவற்றை எல்லாம் பேக் அப்?


சில பைல்களை 'நாம் பேக் அப் காப்பி எடுத்தே ஆக வேண்டும்' என்ற வகையில் அனைவரும் வைத்திருப்போம். இவற்றுக்கு ஏதேனும் ஒரு வகையில் பேக் அப் கம்ப்யூட்டரில் அல்லது வேறு தேக்கக மீடியாவில் வைத்திருப்போம். இத்தகைய பைல்கள் தவிர, நாம் எவற்றை பேக் அப் செய்திட வேண்டும்?
உங்களுடைய பைல்களை, அவை கொண்டுள்ள டேட்டாவின் அடிப்படையில், பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் பிரித்து வைத்திருந்தால், நாம் பேக் அப் செய்திடப் பயன்படுத்தும் சாப்ட்வேர் செயலிக்கு, பேக் அப் செய்திட வேண்டிய பைல்களின் வகையைக் (டாகுமெண்ட், படங்கள், விடியோ மற்றும் நம் மியூசிக் போல்டர்கள்) காட்டிவிடலாம். இருப்பினு, வேறு சில வகை டேட்டாவினையும் நாம் பேக் அப் செய்தாக வேண்டும்.

மின் அஞ்சல்

நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் பெற்று, நம் கம்ப்யூட்டரில் தங்க வைக்கும், இமெயில் க்ளையண்ட் செயலிகளைத் (தண்டர்பேர்ட், ஆப்பரா போன்றவை) தற்போது அவ்வளவாக யாரும் பயன்படுத்துவது இல்லை. இத்தகைய செயலிகளில், எப்படி பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது என்ற அமைப்பினை, அந்த செயலிகளிலேயே அறிந்து பயன்படுத்தலாம்.
ஜிமெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் போன்ற இணையத்தில் இயங்கும் இமெயில் தளங்களையே நாம் பயன்படுத்துகிறோம். எனவே, அவற்றை எப்படி பேக் அப் காப்பி எடுக்கலாம் என்பதனை, அந்த தளத்தில் தரப்பட்டுள்ள வழிவகைகளைத் தெரிந்து பின்பற்றலாம். அல்லது, eM Client போன்ற டெஸ்க்டாப் சாப்ட்வேர் செயலிகலைப் பயன்படுத்தி, அந்த அஞ்சல்களைப் பெறலாம். இந்த செயலிகள், இணையத்தில் இருந்தவாறே இயங்கும் அஞ்சல் தளங்களிலிருந்து அஞ்சல்களைப் பெற உதவுகின்றன. இவை, ஜிமெயில், கூகுள் ஆப்ஸ், ஐ க்ளவ்ட், அவுட்லுக் டாட் காம் மற்றும் இது போல இயங்குகிற இணைய தள மெயில் செயலிகளை சப்போர்ட் செய்கின்றன. இந்த செயலியில் தொடர்ச்சியாக பேக் அப் செய்திட செட்டிங்ஸ் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Tools > Settings > Backup எனச் சென்று, பேக் அப் செய்வதற்கென ஒரு போல்டரை அமைத்து, தொடர்ச்சியாக பேக் அப் செய்திடலாம்.

பிரவுசர்கள்

உங்களுடைய பிரவுசர்களில், நீங்கள் கவனமாக சில புக்மார்க்குகள் அல்லது பேவரிட் எனப்படும் குறியீடுகளை, அடிக்கடி பார்க்க வேண்டிய தளங்களுக்காக ஏற்படுத்தி இருக்கலாம். இவை எப்போதும் நமக்குத் தேவைப்படும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆவதனால், இவற்றை நாம் இழக்கும் நிலை ஏற்படலாம். எனவே, இவற்றையும் ஒரு பைலில் அமைத்து, அதற்கான பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது.
சில பிரவுசர்கள் இதற்கான வழிமுறைகளையும் கொண்டுள்ளன. மொஸில்லா, தன் பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே, இவற்றைச் சுருக்கி பேக் அப் செய்திடும் வழியினைக் கொண்டுள்ளது. வலது மேல் பக்கம் உள்ள மூன்று கோடுகள் அடங்கிய ஐகானில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம், இதற்கென அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்தி பேக் அப் செய்திடலாம். இதனை பயர்பாக்ஸ் இயங்கும் உங்களுடைய அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பெறும் வகையில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் செயலியை ஏற்று இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களிலும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
கூகுள் குரோம் பிரவுசரிலும் இதே போன்ற ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, குரோம் பிரவுசரில் நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் ((bookmarks, extensions, themes,) பேக் அப் பைலாக மாற்றி, நம் கூகுள் அக்கவுண்ட் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டால், மற்ற கம்ப்யூட்டர்களில், நாம் நம் கூகுள் அக்கவுண்ட் மூலம் குரோம் பிரவுசரைப் பயன்படுத்துகையில், மாற்றங்களும் பேக் அப் பைலில் அப்டேட் செய்யப்படும்.
நம்மில் பலர் ஒரே ஒரு பிரவுசர் மட்டுமே பயன்படுத்துவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைப் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு பிரவுசரிலும் புக்மார்க்குகளை அமைக்கிறோம். ஒவ்வொரு பிரவுசருக்கும் ஒரு புக்மார்க் பேக் அப் பைல் உருவாக்கி வைப்பது, நம் நேரத்தை வீணாக்கும். இந்த சிரமத்தினைப் போக்கும் வகையில் எக்ஸ்மார்க்ஸ் (Xmarks) என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயர்பாக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்புளோரர், சபாரி உட்பட அனைத்து பிரவுசர்களிலும் அமைக்கப்படும் புக்மார்க்குகளை இது ஒருங்கிணைத்துத் தருகிறது. நீங்கள் ஏற்படுத்திய புக்மார்க்குகளில் சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், அது உடனே மாற்றத்துடன் பேக் அப் பைலுக்கும் செல்கிறது.

ட்ரைவர் பைல்கள்

கம்ப்யூட்டரோடு அதன் துணை சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், அவற்றை இணைத்து இயக்குவதற்கான செயலிகளே, 'ட்ரைவர் பைல்கள்' என அழைக்கப்படுகின்றன. நம் கம்ப்யூட்டர், விடியோ கார்ட், அச்சுப் பொறிகள், ஸ்கேனர்கள் மற்றும் இது போன்றவற்றுடன் “பேசுவதற்கு” இந்த ட்ரைவர் பைல்கள் தேவைப்படுகின்றன. இந்த பைல்கள் நமக்குத் தனியே அனைத்தும் கிடைப்பதில்லை. அவை தாமாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் எடுத்துப் பதியப்பட்டுக் கொள்ளப்படுகின்றன. அப்படியானால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி, மீண்டும் இயக்கப்படுகையில், இந்த துணை சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்களின் தேவையை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? ட்ரைவர் பைல்களை பேக் அப் செய்வதற்கென்றே ஒரு சில சாப்ட்வேர் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில், DriverMax என்னும் செயலி பலராலும் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. http://www.drivermax.com/ என்ற இணைய தளத்தில் இதனை இலவசமாகப் பெறலாம். ஆனால், இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும் போது சற்று கவனமாக இருக்கவும். இது கூடுதலாகச் சில டூல் பார்களையும் பதிகிறது. மாற்றாக Slim Drivers என்ற செயலியை நிறுவலாம். இந்த செயலியும் ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைப்பதுடன், பேக் அப் எடுத்துள்ள ட்ரைவர் பைல்களுக்குத் தற்போதைய மேம்படுத்தப்பட்ட பதிப்பு உள்ளதா எனத் தேடி அறிவிக்கிறது.
ட்ரைவர் பைல்களை பேக் அப் எடுத்து வைக்காவிட்டால், அவற்றைத் தேடி, துணை சாதனங்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்களின் இணைய தளங்களைத் தேடி அலைய வேண்டும். எனவே, மேலே கூறிய இரண்டு செயலிகளில், ஏதாவது ஒன்றின் மூலம், அனைத்து ட்ரைவர்களுக்கும் பேக் அப் எடுத்து வைப்பதே நல்லது.

சமுதாய வலைத் தளங்கள்

குறைந்த பட்சம் ஒரு சமுதாய இணைய தளத்திலாவது நாம் நமக்கென பக்கம் வைத்து இயங்கி வருகிறோம். ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் தங்களுக்கென கணக்கில்லாத கம்ப்யூட்டர் பயனாளரை நாம் காண்பது அரிது. இந்த தளங்களில் நாம் பதிவு செய்த தகவல்கள், படங்கள் ஆகியவற்றை நாம் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த தளங்கள் கிராஷ் ஆகாது என்று அனைவரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இருப்பினும், நாம் இதனை பேக் அப் எடுத்து வைத்து, மீண்டும் மீள் பதிவினை ஏற்படுத்தப் போவதில்லை. நாம் பதிந்த தகவல்களுக்கும் படங்களுக்கும் நம்மிடம் ஒரு காப்பி இருப்பது நல்லதுதானே.
ட்விட்டர் வலைத்தளத்தில், வேறு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இதற்குத் தேவை இல்லை. உங்களுடைய அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கம் சென்று, செட்டிங்ஸ் பிரிவில் "Request your archive" என்ற இடத்திற்குச் செல்லவும். நீங்கள் பதிவு செய்த அனைத்து தகவல்களும் படங்களும் மொத்தமாக உங்களுக்குக் கிடைக்கும். அதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
பேஸ்புக் வலைத் தளத்தில், General Account Settings செல்லவும். அங்கு கீழாகச் சென்றால், "Download a copy of your Facebook data" என்று ஒரு லிங்க் இருக்கும். உங்கள் அனைத்து பதிவுகளும் எடுக்கப்பட்டு, தொகுக்கப்படும். இதனைப் பெறுவதற்கான லிங்க் உங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

பேக் அப் வகைகள்


பேக் அப் செய்வது என்பது, பைல் ஒன்றை இன்னொரு இடத்தில் காப்பி செய்வதைப் போல எளிதானதுதான். உங்கள் ஹார்ட் ட்ரைவிலிருந்து, ஒரு ப்ளாஷ் ட்ரைவிற்குக் காப்பி செய்வதும் ஒரு வகையான பேக் அப் தான். இருப்பினும், மீண்டும் மீண்டும் பெறும் வாய்ப்புகள், பாதுகாப்பான பேக் அப், பேக் அப் செய்ததனை அணுகிப் பெறும் முறை ஆகியவையே, எந்த வகை பேக் அப் முறையினை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவு செய்கின்றன.
குறிப்பிட்ட வகை டேட்டாவினை மட்டுமே பேக் அப் செய்திட வேண்டும் என எண்ணினால், அதனை எளிதாக்கும் சாப்ட்வேர் ஒன்றைப் பயன்படுத்தவும். பேக் அப் என்பது, பைல் ஒன்றை ஒரு காப்பி எடுப்பது மட்டுமல்ல. இரண்டு நகல்களாவது ஏற்படுத்த வேண்டும். எனவே, போல்டர் முழுவதையும் காப்பி செய்து, பின்னர் அதே போல்டரில் மீண்டும் பைல்களை இணைக்கையில், போல்டர் முழுவதையும் பேக் அப் எடுத்து வைக்கலாம். இதற்கென பல செயலிகள் உள்ளன. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதனுடன் இணைத்துத் தரப்பட்டுள்ள Backup and Restore என்ற வசதியை இதற்குப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 முதல் File History என்ற பேக் அப் டூல் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஹார்ட் டிஸ்க்கின் முழு இமேஜையும் பேக் அப் எடுக்கலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கின் முழு பேக் அப் எடுக்க, Bvckup2, SyncBackSE or SyncBackPro, மற்றும் AOMEI Backupper Standard ஆகிய செயலிகளைப் பயன்படுத்தலாம்.

க்ளவ்ட் தேக்ககம்

ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தி வருவோருக்கு, க்ளவ்ட் ஸ்டோரேஜ் பேக் அப் மிகவும் வசதியான ஒன்றாகும். இதன் மூலம், நாம் பயன்படுத்தும் எந்த கம்ப்யூட்டரிலும், நம்முடைய பைல்கள் அனைத்தையும் பெற்றுப் பயன்படுத்தலாம். இந்த வசதியில் தரப்படும் டூல், நம் பைல்களை அனைத்தையும், க்ளவ்ட் முறையில் பேக் அப் எடுத்து வைப்பதால், நாம் எந்த கம்ப்யூட்டர் வழியாகவும், அவற்றைப் பெற்று பயன்படுத்தலாம். ஸ்மார்ட் போன்களிலும் இவற்றைப் பெறலாம்.
க்ளவ்ட் பேக் அப் செயல்பாடுகளுக்கு, பல இணைய தளங்கள் வழி தருகின்றன. 2 ஜி.பி.முதல் பல அளவுகளில் இடம் தரப்படுகின்றன. கட்டணம் செலுத்தியும் கூடுதல் இடத்தினைப் பெற்று க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறையில், நம் பைல்களுக்குப் பேக்கப் எடுக்கலாம்.

தியானம்,யோகா செய்த பலனை தரும் தமிழ் மந்திரம்


யோகா ,தியானம் செய்வதால் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் புத்துணர்வு பெறுகின்றன..அது போன்ற அனுபவத்தை மந்திரங்களை படிப்பதாலும் ,சொல்வதாலும் பெற முடியும்...

தினசரி காலை ,மாலை கந்த சஷ்டி கவசம் படித்தால் தியானம்,யோகம் செய்த பலன்கள் கிடைக்கும்..பொறுமையாக அதனை உணர்ந்து படிக்க வேண்டும்.கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க எனும் வரிகளை படிக்கும்போது உங்கள் கண்கள் பாதுகாப்பு அடைந்ததை போல உணர வேண்டும்...
ஒவ்வொரு அங்கத்தினையும் முருகனின் வேல் காப்பது போல அமைந்த கந்த சஷ்டி கவசத்தை படிக்கும்போது ,மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒரு சில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இதனால் மூளையின் தனிச்சிறப்பு கவனத்திற்கு அதாவது சிறப்பு பாதுகாப்பு நம் மூளையின் உத்தரவால் அந்த அங்கம் பெறுகிறது.இதனால் முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும்

if you read SKANDHA SASTI KAVACHAM daily in the morning and evening,you will get the benefit of meditation,for this you should read slowly with steady mind.
While reading Kathirvel erandum kann inai kaaka, you should feel like your eyes are safeguarded. While reading this,You should also feel that every part of your body is safeguarded.
When reading this,our soul is watching everypart of our body and our brain is keenly watching this for few seconds,because of this,our body's internal parts are getting special care as per our mind's order,because of this,we can live with complete health.

முருகனையே குருவாய் வந்து அருள சொல்லி கேட்கும் அருமையான குரு மந்திரம்.தினசரி இதை படிக்க குரு அருள் மட்டுமல்ல முருகனருளும் கிடைக்கும்...தமிழ் மந்திரம் நோய்களை போக்கும் வறுமையை ஒழிக்கும்...

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


குழந்தைகளை இந்த மந்திரம் தினசரி படிக்க சொன்னால் நாக்குக்கும் ,மனதுக்கும், நினைவாற்றலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்.

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. 

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். 

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. 

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். 

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். 

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும். 

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். 

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். 

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். 

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.



.1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.


உடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை:
* எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* தினமும் 2-லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்
* பட்டினிக் கிடத்தல் கூடாது
* அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது ௦
* உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்
* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
* எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
* கூல் ட்ரிங்ஸ்சுக்கு 'தடா' விதிக்க வேண்டும்.
* தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)
* இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
* 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
* கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள 'டோன்டு மில்க்' வகைகளையே பயன்படுத்துங்கள்.
* அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.


தமது எடையை அடிக்கடி பார்த்து அதற்குத் தகுந்தவாரி உணவுப் பழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சராசரி எடை விபரம் கீழ்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உயரம்
(செ.மீ)
ஆண்
(கிலோ)
பெண்
(கிலோ)
உயரம்
(இன்ச்)
ஆண்
(எல்.பி)
பெண்
(எல்.பி.)
147-45-5958-100-131
150-45-6059-101-134
152-46-6260-103-137
15555-6647-6361123-145105-140
15756-6749-6562125-148108-144
16057-6850-6763127-151111-148
16258-7051-6964129-155114-152
16559-7253-7065131-159117-156
16760-7454-7266133-163120-160
17061-7555-7467135-167123-164
17262-7757-7568137-171126-167
17563-7958-7769139-175129-170
17764-8160-7870141-179132-173
18065-8361-8071144-183135-176
18266-85-72147-187-
18267-87-73150-192-
18768-89-74153-197-
19069-91-75157-202-

உணவுப் பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.



நான் சொல்வதை கேளுங்கள். லாஜிக் பேசாதீர்கள்.
வெறுமனே நான் சொல்வதை ஒரு அடிமைப் போல் கேளுங்கள்.

இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள். 
ஒன்று உணவு, மற்றொன்று உடல்பயிற்சி.

உணவு

காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை வாயில் எதுவும் வைக்காதீர்கள்.

மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள்.
அதன்பின் இரவு வரை வாயில் எதுவும் வைக்காதிர்கள்.

இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சிம்பெலாக சாப்பிடுங்கள்.
அதன் பிறகு எதுவும் வேண்டாம்.

இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கணும். 

அடுத்து, குடிக்கும் பானம்.
வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்கணும்.

தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை நோ....நோ...நோ...

உடற்பயிற்சி

உடற்பயிற்சி என்று  தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை.

அன்றாடம் நடைப் பயிற்சி செய்யுங்கள். 
வேண்டுமென்றே, அன்றாடம் நடந்து போங்கள்.
விருப்பப்பட்டு அன்றாடம் நடந்து போங்கள்.

மார்க்கெட் போகனுமா?
காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் பார்க் பண்ணி நடந்து போங்கள்.

வேறு எங்காவது போகனுமா?
கடையின் வாசலில் கார் பார்க் பண்ண இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள்.
தூரமாக பார்க் பண்ணி நடந்து செல்லுங்கள்.

படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், சும்மா ஏறி போங்கள்.
படி ஏற விரும்புங்கள்.

குப்பை போடணுமா?
வயிறு  அழுந்த குனிந்து குப்பை போடுங்கள்.

வீடு கூட்டணுமா?
வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.

மெனக்கெட்டு,
அக்கறை எடுத்து,
மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு,
வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள்.
எந்த செலவும் இல்லை. 

ஒரு மாதம் செய்து பாருங்கள்.
உடல் எடை வித்தியாசம் தெரியும்.

ஆனால், யாரும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்.
காரணம், அவை சவால் இல்லை.
பெருமைப் பட எதுவும் இல்லை.
காசு செலவு இல்லை.

மாறாக,
சுய கட்டுப்பாடு அவசியம்.
வாயை கட்டணும்.
மெனெக்கெட்டு நடக்கணும்.

இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

உடல் எடை குறைக்க மருந்து விற்பவர்கள் எதையும் விற்பார்கள். அவர்கள், பழைய கால மருத்துவம், நவீன மருத்துவம் என்ற பெயரில் எதையாவது நம் தலையில்  கட்டுவார்கள். முடிந்தால், மலத்தை  பாடம் பண்ணி, இது இயற்கை வைத்தியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். எல்லாம்  ஒரே பிசினஸ் மயம்தான்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள்,  பாடம் செய்யப்பட்ட மலத்தையும் கூட மருந்தாக எடுக்க தயார் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு எப்படியாவது எடை குறைந்தால் சரி. எதை சாப்பிடுகிறோம் என்று கவலையில்லை.

மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றால், உலகில் ஒரு பணக்கார குண்டு நபர்களை கூட நாம் பார்க்க இயலாது. எல்லாரும் அதிக பணம் கொடுத்து, விலையுயர்ந்த மருந்து சாப்பிட்டு, சிலிம்மாகத்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை