எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகும் தேங்காய்



நாம் அலட்சியம் செய்யும் உணவு பொக்கிஷங்களில் ஒன்று தேங்காய். பாலில் தான் சத்துக்கள் உள்ளன என்று பாலை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரம் தாய்ப்பாலுக்கு இணையான தேங்காயை அப்படியே விட்டு விட்டோம். அதனால் தான் பாலின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதில் சேரும் கலப்படங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குழந்தைகள் கூட அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர் 

கலப்படம் இல்லாத தேங்காயை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள். அவசியம் அதனை தினமும் பாலுக்கு பதில் தேங்காயை பச்சையாக உண்டு வாருங்கள். பாலில் இல்லாத பல மகத்துவங்கள் தேங்காயில் இருக்கிறபடியால் அதனை தொடர்ந்து உண்ணும் பொழுது உங்கள் உடலில் அற்புத மாற்றங்கள் உண்டாகும்.

உடலில் சேரும் கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) கரைக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்பை (HDL Cholesterol) அதிகரிக்கும்.
தேங்காயில் இருக்கும் மெக்னிசியம் சத்து எலும்புகளுக்கு சக்தியை தருகிறது. இதனால் மூட்டுவலி போன்றவை குணமாகும் 
சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வழி செய்யும்.
களங்களை பாதுகாக்கும்.
அதில் இருக்கும் arginine எனும்  அமிலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. 
தலை முடி வளர்ச்சியை மேம்படுத்தும் கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது.
இதில் இருக்கும் நல்ல கொழுப்பு தோல் அழகை மேம்படுத்தும் 
இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்சத்து மலச்சிக்கலை தீர்க்கும்.
வயிற்று புண் மற்றும் வாய் புண் மாற ஒரு சிறந்த உணவு.
நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
தேங்காயில் இருக்கும் குளுக்கோசு மூளை திறனை சீராக்கி ஞாபக மறதியை சரி செய்யும் 
இளநரையை போக்கும் 

குழந்தைகளுக்கு பாலுக்கு பதில் தினமும் தேங்காய் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். கடித்து உண்ண முடியாத குழந்தைகளுக்கு பாலாக பருக கொடுங்கள். குழந்தைகள் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எளிதில் நோய்வாய் பட மாட்டார்கள்.

தேங்காயை சமைத்து உண்ணும் பொழுது தான் அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது. ஆகவே சமைத்து உண்பதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளோடு பச்சை தேங்காயையும் சேர்த்து தினமும் உண்ணுங்கள். அது தரும் மாற்றம் உங்களையே வியக்க வைக்கும்.










 

குளுக்கோஸ் பவுடர் எந்தெந்த பொருள் சேர்த்து தயாரிக்கிறார்கள்? இதை சாப்பிடுவதால் நன்மையா தீமையா?

  • சுக்ரோஸை (கரும்பு சர்க்கரை) நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அல்லது சல்பூரிக் அமிலத்துடன் சுமார் இரண்டு மணி நேரம் வேகவைத்து குளுக்கோஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும்.
  • இது சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸுக்கு ஹைட்ரோலைஸ் செய்கிறது.
  • பிரக்டோஸிலிருந்து குளுக்கோஸைப் பிரிக்க அதை குளிரூட்டுவர்.
  • அவ்வாறு குளிரூட்டும் போது அதில் ஆல்கஹால் சேர்க்கப்படும்.
  • இதன் மூலம் குளூக்கோஸ் பெறப்படும்.
  • இதனால் நன்மையா? தீமையா? என்று கூறும்போது நன்மைதான்.
  • ஆனால் அதுவும் அளவுடன் இருப்பது நன்று.
  • அளவுக்கு மீறும்போது இதனால் ஒருசில உடல்நலக் கேடும் ஏற்படலாம்.

கடைகளில் வாங்கி சாப்பிடும் கிரில் சிக்கன் உடலுக்கு நல்லதா?

கடைகளில் கிடைக்கும் கிரில் சிக்கன்.. அஜினோமோட்டோ… கலர் பவுடர் சேர்த்து.. பாமாயில் கலந்து மசாலா கலவையில் மேரினேட் செய்து சுட்டு எடுக்க படும்..

அதில் எண்ணெய் குறைவாக இருந்தாலும்.. ஆரோக்கியமான உணவு என்று சொல்லி விட முடியாது . அதற்கு துணை உணவாக வரும் மயோனைஸ் கூட எண்ணெயை நுரைத்து வர அடித்து செய்ய படுபவை தான்.. வயிற்று புண் உண்டாகும்.

டயட் மெய்ன்டெயின் செய்ய நீங்களே சமைத்து சாப்பிடுவதே சிறந்தது..

என் தம்பி செய்யும் ரொம்பவும் சிம்பிளான பேலியோ ரெசிபி சொல்கிறேன்..

ஒரு முழு சிக்கனை தோலுரித்து… அளவான சைஸ் துண்டுகளாக வாங்கி கொள்ளவும்..

ஒரு மூன்று முறை.. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து கழுவி சுத்தம் செய்யவும்.

குக்கரில்.. தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு.. சீரகம் ஒரு ஸ்பூன்.. கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து.. பின் சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்து.. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்..ஒரு பச்சை மிளகாய்… ஒரு பெரிய வெங்காயம் வெட்டி சேர்த்து.. ஒரு சிறிய தக்காளி சேர்த்து.. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்.. கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி…கால் ஸ்பூன் மஞ்சள் தூள் …அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி.. குக்கரை மூடி.. ஸ்டீம் வந்தவுடன்.. வெயிட் போட்டு.. இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

பின்பு பிரஷர் ரீலீஸ் ஆனவுடன்.. சூடான சிக்கன் சூப் உடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால்.. அருமையான பேலியோ சிக்கன் .. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. பிரச்சினை இல்லை..

வயிற்றுக்கு உகந்தது.... உடலுக்கு நல்லது.. slow electric cooker வாங்கி கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும்.


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது; தயவுசெய்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள்- சிலம்பரசன்



சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்காகத் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று (02.01.21) சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:

இந்த படத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்போது நான் எப்படி இப்படி ஆனேன், எப்படி இந்த படம் முடிந்தது, எப்படி பொங்கலுக்கு வருகிறது என்று பலரும் ஆச்சர்யத்தோடு கேட்டார்கள். சத்தியமாக எங்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. ஊரடங்கின் போது மாநாடு படத்தின் படப்பிடிப்பை எப்போது மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்போது அது சாத்தியமாகவில்லை. எனினும் விரைவாக ரசிகர்களுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஏற்கெனவே சுசீந்திரனிடம் ஒரு படம் குறித்து பேசியிருந்தேன். மீண்டும் அவரிடம் என்னுடைய யோசனையை தெரிவித்தபோது அவர் சம்மதம் தெரிவித்தார். வீடியோ காலில் தோன்றி என்னிடம் ‘ஈஸ்வரி’ படத்தின் கதையைச் சொன்னார்.
ஊரடங்கு காலகட்டத்தில் அனைவருமே ஒருவித மன உளைச்சலில் இருந்தோம். ஒரு எதிர்மறையான சூழலில் இந்த கதையை கேட்ட போது ஒரு நேர்மறை எண்ணம் உருவானது. கதையை கேட்ட எனக்கே இவ்வளவு நேர்மறை எண்ணம் எழுகிறது. இந்த படம் திரைக்கு வந்தால் மக்களுக்கும் நேர்மறை விஷயமாக இருக்குமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் ‘ஈஸ்வரன்’.

இப்போது எங்கு பார்த்தாலும் எதிர்மறை எண்ணங்கள், பொறாமை, யார் எது செய்தாலும் அதை குறை சொல்லவே ஒரு கும்பல் இருக்கிறது. தயவுசெய்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள். இங்கு அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அவரவர்க்கு ஏதோ ஒரு வலி இருக்கும், கஷடம் இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை அனைவருமே போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் அறிவுரையைக் கேட்பதை நிறுத்துங்கள். என் ரசிகர்களுக்கு ஒரு நண்பனாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் சுத்தமாக இருந்தால் எல்லாமே தானாக நடக்கும். என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் மனதில் வலி இருந்ததால் தான் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. படப்பிடிப்புக்குக் கூட போகமுடியவில்லை. இறைவன் வேறு எங்கும் இல்லை, நம் இதயத்தில் தான் இருக்கிறார். உள்ளே வருத்தப்பட்டேன் வெளியில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. உள்ளே சரி செய்ததும் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். போட்டி, பொறாமை, சண்டை இவையெல்லாம் எதுவுமே வேண்டாம்.

இவ்வாறு சிலம்பரசன் பேசினார்.