எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 15 அக்டோபர், 2020

கிரிக்கெட் வீரர் முரளிதரனை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?


1. ஈழத்தில்  தமிழ்மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த நாளில் இறுதி கட்ட போரின் போது, போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்று கருத்து தெரிவித்தார் முத்தையா முரளிதரன்.

2. இனப்படுகொலை குறித்தான விசாரணைக்கு கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுகிறது. சர்வதேசம் இதனைக் குழப்ப வேண்டாம் என்று பேசினார் முரளி.

3. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது, விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியதுஎன கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் முத்தையா முரளிதரன் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

4. பிரிட்டர் பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை இனப்படுகொலை குறித்த பார்வையிட வந்த போது, காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கூடி அவரிடம் முறையிட்டனர். அப்போது, முப்பது தாய்மார்கள் கூடி போராடுவதால் இலங்கை அரசு தவறு செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. யாரோ தூண்டிவிட்டு இயக்கும் நாடகம் என்று கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேசியதால் எதிர்ப்பு உண்டானது.

5. கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது’ என்று சிங்களத்தில் உரையாடியதால்  தமிழ் இளைஞர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்திட, முரளியைத் தாக்க முயன்றதாக அந்த இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

6. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு இலங்கையின் தங்கல்லை பகுதியில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து, தனது சொந்தப் பணத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் முத்தையா முரளிதரன்.

7. தனது நட்சத்திர அந்தஸ்தால் இலங்கையில் எப்போது தேர்தல் நடந்தாலும் ராஜபக்சே ஆதரவாளராக தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார் முரளி.

ஆக தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை முத்தையா முரளிதரன்800 என்ற பெயரில் விஜய்சேதுபதியை வைத்து சினிமாவாக எடுக்க முயற்சிக்கும் போது எதிர்ப்பு வராமல் எப்படி இருக்கும்.

விஜய்சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது  அதை அவர் கெடுத்துக் கொள்ளக்கூடாது.. இது போன்ற படங்களை அவர் தவிர்க்க வேண்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக