எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 மார்ச், 2020

நேத்து நடந்த மேட்ச்சில் நாம் படு தோல்வி அடைந்திருக்கலாம்



நேத்து நடந்த மேட்ச்சில் நாம் படு தோல்வி அடைந்திருக்கலாம்

ஆனால் உண்மையான கிரிக்கெட் ஜெயித்து இருக்கிறது . ஆண்டாண்டு காலமாக ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கூட்டங்கள் சேர்ந்து வந்த நிலையில் முதல் முறையாக 86000 மக்கள் நேரில் வந்து போட்டியை பார்த்துள்ளனர். 

2015 இதே மைதானத்தில் நடந்த ஆண்கள் உலககோப்பை இறுதி போட்டியில் கூடிய கூட்டம் 93,000 பேர்.

1999ம் ஆண்டு நடந்த பெண்கள் புட்பால் மேட்ச்சில் அமெரிக்கா மற்றும சீனாவுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது கூடிய கூட்டம் 90,000  இது தான் பெண்களுக்கான போட்டியில் அதிகம் பேர் பார்த்த போட்டி.

இந்த இரண்டு சாதனைகளை எப்படியாவது முறியடிக்க வேண்டும என்று #FilltheMCG என்று பிரசாரங்கள் முன்னெடுக்கபட்டது . மிட்செல் ஸ்டார்க் இரண்டு நாளைக்கு முன்னாடி சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து பைனல் போட்டியை பார்ப்பதற்காக அனுப்பிய செய்தியை மீடியாக்களில் பரவ செய்து ரசிகர்களின் இறுதி நேர வருகையை இன்னும் அதிகபடுத்தினார்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. 
இந்த முன்னெடுப்பு காரணமாக 86,000 பேர் போட்டியை பாக்க வந்திருந்தார்கள் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருந்தால் வாழ்நாளில் மறக்கமுடியாத சாதனையாக இருந்திருக்கும் தவறிவிட்டது பரவாயில்லை. 

சரி இப்படி கூட்டம் கூடியதால் என்ன நண்மை என்று பார்த்தால் ஏகப்பட்ட விசயங்கள் ஒளிந்திருக்கிறது. 

நேத்து கூடிய கூட்டத்தை பார்த்து கண்டிப்பாக பிசிசிஐ கண்கள் உறுத்தியிருக்கும் நாமளும் இதே மாதிரி செய்தால் என்ன என்று. 

120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் கூட்டம் கூட்டவா சிரமம் வந்துவிட போகிறது. இவ்வுளவு நாள் ஆண்கள் விளையாடும் போட்டிக்கு மட்டும் முக்கியதுவம் கொடுத்து வந்த பிசிசிஐ நேற்று நடந்த மேட்ச்சை பார்த்து கண்டிப்பாக Womens IPL ஐ  முன்னெடுக்கும். கங்குலி அதை சிறப்பாக செய்வார் என்றே என்னுகிறேன். ஏற்கெனவே அந்த ஐடியாவை செயல் அளவில் வைத்திருந்த பிசிசிஐ இனி முழு வீச்சில் முன்னெடுக்கும்.

அப்படி பெண்கள் ஐபில் ஆரம்பிக்கபட்டால் ஏகப்பட்ட  வீராங்கனைகள் பயன்பெறுவார்கள். ஷபாலி வர்மா மாதிரி இன்னும் நிறைய வீரர்கள் விளையாட முன் வருவார்கள் இந்தியாவின் அத்தனை பகுதிகளில் இருந்தும் . அனைத்து பகுதிகளிலும் Womens cricket பிரபலபடுத்தப்படும்.

கனா படத்தில் வரும் விராங்கனைகளை   சினிமாக்களில் மட்டும்  பாத்துகொண்டிருந்தவர்களுக்கு நிஜ கனா விராங்கனைகளை பார்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

ஆனால் இதைபற்றி எல்லாம் பேசாமல் எல்லா பயலும் நேத்து அவனவன் Favorite ஐ வச்சு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிங்க.

யார் அதிக கப் வாங்குனா யார் அதிக ரன் அடிச்சு ஜெயிக்க வச்சாங்க அவர் மட்டும் தான் பெருசு இல்ல இல்ல எனக்கு இவர் தான் பெருசு என்று ஒரே அட்டாக் போஸ்ட். திருந்துங்கடா டீ வாங்கிதரேன். 

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக