எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

ஆம்பூர் பிரியாணி





1. மட்டன் கறி – 1 கிலோ
2.வெங்காயம் – 1/4 கிலோ
3.தக்காளி – 1/2 கிராம்
4.இஞ்சி பூண்டு விழுது
5.பச்சை மிளகாய்
6. எலுமிச்சை
7.நறுமணப்பொருட்கள்
8. தயிர்
9.பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி
10.கடலை எண்ணெய்
11.கொத்தமல்லி – புதினா
12.உப்பு
13. மிளகாய் தூள்
14. கரம்மசாலா தூள்
15.தனியா தூள்
16. சிவப்பு மிளகாய் தூள்
 

செய்முறை:
 
1. முதலில், குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும்.
 
2. பின்பு அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
3. வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
 
4. பின்பு, அதில் மட்டனை சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
 
5. இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
 
6. அதன் பின்பு, மிளகாய் தூள், கரம்மசலா தூள், தனியா தூள், நிறம் தரும் வெறும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
 
7. பின்னர், தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.
 
8. இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.
 
9. இப்போது அடுப்பில் தோசைக் கல்லை வைத்து , குக்கரை மூடி அதன் ஓரத்தில் ஈரத்துணியை சுட்டி கட்ட வேண்டும்.
 
10. இப்படியே சுமார் 20 நிமிடம் தம் போட வேண்டும்.
 
11. அப்புறம் திறந்து, நெய் தூவி மணக்க மணக்க பரிமாறினால் சுவையான வேலூர் ஸ்பெஷல் ஆம்பூர் பிரியாணி தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக