எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 12 டிசம்பர், 2019

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிங்க... ஏராள நன்மைகளை அள்ளித்தருமாம்!

சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

வெல்லம், கரும்பு அல்லது பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் உடலில் பல நோய்களுக்கு தீர்வு தருகின்றது.

அந்தவகையில் தற்போது இரவில் வெல்லத்தை சுடுநீரில் கலந்து குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.


வயிற்றுப் பிரச்னைகளான வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், 2 துண்டு வெல்லத்தை சாப்பிட்டு 1 டம்ளர் சுடுநீரை இரவு தூங்கும் முன் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால், செரிமான நொதிகளின் அளவு அதிகரித்து, செரிமானம் சீராக நடைபெறும். வெல்லம் மன இறுக்கத்தை எதிர்க்கும் பொருளாக செயல்படும்.

இரவு தூங்கும் முன் வெல்லத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால், உடலில் சந்தோஷமான ஹார்மோன்கள் மேம்படுத்தப்படும்.
வெல்லத்தில் இனிப்பு குறைவு மற்றும் சர்க்கரை குறைவு என்பதால் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சாப்பிட்டால், பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயில் பாக்டீரியாக்கள் அதிகம் இருந்தால் தான், வாய் துர்நாற்றம் வீசும். இதற்கு வெல்லத்துடன் சிறிது ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைக்கும்.
வெல்லம் சாப்பிட்டு சுடுநீரைக் குடித்தால் சிறுநீரக கற்களை உடைத்தெறிய உதவும். கற்கள் அளவில் மிகவும் சிறியதானால், எளிதில் சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக