எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 14 மார்ச், 2015

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

'இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

இந்த அம்மாக்கள் 
தோசைக்கல்லில் 
நிலவு வார்ப்பவர்கள் !
===================
அப்பா கட்டிய 
வீடாயிருந்தாலும் 
அது எமக்கு 
அம்மா வீடுதான் !
===================
அடுப்படியே 
அம்மாவின் 
அலுவலகம் ! 
அன்பு மட்டுமே 
எதிர்பார்க்கும் சம்பளம் !
===================
பிள்ளைகள் 
வெளியூரில் 
பணியிலிருக்கும் 
ஒரு வீட்டில், 
பக்கத்துவீட்டுக் குழந்தைகள் 
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
===================
அப்பா வாசம் 
வெயில் வாசம் ! 
அம்மா வாசம் 
நிலா வாசம் ! 
எமது 
சமையலறையெங்கும் 
நிலா வாசம் !
===================
எமக்குக் 
காய்ச்சல் வந்தால் 
மருந்து தேவையில்லை ! 
அடிக்கடி வந்து 
தொட்டுப்பார்க்கும் 
அம்மாவின் கையே 
போதுமானது !
===================
இவ்வளவு 
வயதாகியும் 
புதுச்சட்டைக்கு 
மஞ்சள்வைத்து 
வருபவனைக் 
கேலி செய்யும் 
நண்பர்களே .......... 
அது, 
அவன் வைத்த 
மஞ்சள் அல்ல ! 
அவன், 
அம்மா வைத்த 
மஞ்சள் !
===================
பிள்ளைகள் 
ஊரிலிருந்து 
கொண்டு வரும் 
பயணப்பையில் 
இந்த அம்மாக்கள் 
எதிர்பார்ப்பது 
இன்னுங்கொஞ்சம் 
அழுக்குத்துணிகளை !
===================
மகனுக்கான 
அப்பாவின் 
கோபத்திற்கெல்லாம் 
அம்மாவின் 
முதுகுதான் 
கிழக்கு !
===================
டைப்பாய்டு வந்து 
படுத்த அம்மாவுக்கு 
சமைக்க முடியவில்லையே 
என்கிற கவலை !
===================
இங்கே பலரது 
அகராதியில் 
வீடு என்கிற 
சொல்லுக்கு நேரே 
அம்மா என்று 
உள்ளது !
===================
புகைவண்டியில் 
பிதுங்கி வழியும் 
பெருங்கூட்டத்தில் 
ஊர் போய்ச்சேர 
ஒற்றைக்காலில் 
நின்றுகொண்டு 
எட்டு மணிநேரம் 
ஒருவன் 
பயணிக்க முடிவதன் 
மூன்றெழுத்துக் காரணம், 
அம்மா !
===================
அம்மா தாயே 
என்று 
முதன் முதலில் 
பிச்சை கேட்டவன் 
உளவியல் மேதைகளுக்கெல்லாம் 
ஆசான் !
===================
எந்தப் பொய் 
சொல்லியும் 
அம்மாக்களை 
ஏமாற்றிவிடமுடியும் 
சாப்பிட்டு விட்டேன் 
என்கிற 
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================
அத்தி பூத்தாற்போல 
அப்பனும் 
மகனும் 
பேசிச்சிரித்தால் 
விழாத தூசிக்கு 
கண்கள் தேய்த்துக்கொண்டே 
அப்பால் நகர்கிறார்கள் 
அம்மாக்கள் !
===================
வெளியூர் செல்லும் 
பிள்ளைகளின் 
பயணப்பைக்குள் 
பிரியங்களைத் 
திணித்து வைப்பவர்கள் 
இந்த அம்மாக்கள் !
===================
பீஸ் கட்ட 
பணமென்றால் 
பிள்ளைகள் 
அம்மாவைத்தான் 
நாடுகின்றன ........ 
காரணம், 
எப்படியும் 
வாங்கிக் கொடுத்துவிடுவாள் ! 
அல்லது 
எடுத்துக் கொடுத்துவிட்டு 
திட்டு வாங்கிக்கொள்வாள் !
===================
வீட்டுக்குள் 
அப்பாவும் 
இருந்தாலும் 
அம்மா என்றுதான் 
கதவு தட்டுகிறோம் !
===================
அம்மாக்களைப் 
பற்றி 
எழுதப்பட்ட 
எல்லா 
கவிதைகளிலும் 
குறைந்தபட்சம் 
இரண்டு சொட்டுக்கண்ணீர் 
ஈரம் உலராமல் !
===================
அகில உலக 
அம்மாக்களின் 
தேசிய முழக்கம் 
இதுதான் .......... 
" எம்புள்ள 
பசி தாங்காது! "'



இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள் !
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான் !
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் !
===================
அப்பா வாசம்
வெயில் வாசம் !
அம்மா வாசம்
நிலா வாசம் !
எமது
சமையலறையெங்கும்
நிலா வாசம் !
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !
===================
இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
===================
பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை !
===================
மகனுக்கான
அப்பாவின்
கோபத்திற்கெல்லாம்
அம்மாவின்
முதுகுதான்
கிழக்கு !
===================
டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
சமைக்க முடியவில்லையே
என்கிற கவலை !
===================
இங்கே பலரது
அகராதியில்
வீடு என்கிற
சொல்லுக்கு நேரே
அம்மா என்று
உள்ளது !
===================
புகைவண்டியில்
பிதுங்கி வழியும்
பெருங்கூட்டத்தில்
ஊர் போய்ச்சேர
ஒற்றைக்காலில்
நின்றுகொண்டு
எட்டு மணிநேரம்
ஒருவன்
பயணிக்க முடிவதன்
மூன்றெழுத்துக் காரணம்,
அம்மா !
===================
அம்மா தாயே
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !
===================
எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
சாப்பிட்டு விட்டேன்
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================
அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்கள் தேய்த்துக்கொண்டே
அப்பால் நகர்கிறார்கள்
அம்மாக்கள் !
===================
வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !
===================
பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !
===================
வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !
===================
அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !
===================
அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள
பசி தாங்காது! "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக