எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வெள்ளி, 18 மே, 2018

டி.ராஜேந்தர் ‘வீராசாமி’ படத்துக்குப்பின் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் கடைசியாக இயக்கிய படம் ‘வீராசாமி’. அதன்பின் அவர் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்துவந்தார். கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் சினிமா விழாக்களில் அவர் பேசும் பேச்சு பலரையும் ஈர்க்கும். 

இந்நிலையில் டி.ராஜேந்தர் மீண்டும் படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார். ‘வீராசாமி’ படத்தை இயக்கி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுதான் அவர் கடைசியாக இயக்கிய படம். அதன்பிறகு தற்போது ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் டி.ராஜேந்தர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக