எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 20 மே, 2018

நாக்கில் எச்சி வடிய வைக்கும் கொங்கு பாய் வீட்டு நாட்டுக்கோழி பிரியாணி..



செய்முறை:

1. இப்பொழுது அடுப்புல கெனமான அகன்ற பிரஷர் குக்கரை வைத்து அதில் நாட்டு பசு நெய்யை விட்டுகோங்க நன்றாக சூடானதும் அதில் பிரிஞ்சி இலை , மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு , பட்டை , கிராம்பு , காஜ்சுபத்திரி , ஏலக்காய் மற்றும் சோம்பு சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.

2. அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.


3. அதில் சின்ன வெங்காயத்துடன கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வதக்க வேண்டும்.

4. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துகோங்க நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

6. அதில் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

7. இச்சமயத்துல அதில் நாட்டுகோழி துண்டங்களை சேர்த்துகோங்க அதில் நன்றாக ஈரப்பதம் குன்றும் வரை வதக்கவும்.

8. அதில் நன்றாக கடைந்து வைத்துள்ள கெட்டியான புளிப்பான தயிரை ஊற்றி நன்றாக இரண்டு நிமிடங்கள் கிளறவும்.

9. அதில் வரமிளகாய் தூள், சீரகத்தூள், குருமிளகு தூள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

10. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள புதினா இலைகள் சேர்த்துகோங்க நன்றாக ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

11. அதில் குங்குமபூ ஊறவைத்துள்ள திக்கான முதல் தேங்காய் பாலை சேர்த்துகோங்க பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசிலை பொருத்தி ஒரு விசிலை விட்டுகோங்க.

12. இச்சமயத்துல மற்றுமொரு அடுப்புல 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டுகோங்க, அதில் 4 தேக்கரண்டி மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க மற்றும் தேவையான அளவிலான உப்பை சேர்த்துகோங்க.

13. பிறகு அதில் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்துகோங்க முக்கால் பாகம் வேகும் வரை 2-3 நிமிடங்கள் கொதிக்க விட்டுகோங்க.

14. பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு சாதத்தை தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.

15. இப்பொழுது பிரஷர் குக்கரில் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் மூடியை திறந்து அதில் முக்கால் பாகம் வேக வைத்த சாதத்தை பிரஷர் குக்கரில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்துகோங்க அதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய புதினா இலைகளை சேர்த்துகோங்க .

16. இப்பொழுது அதன் மேல் பிரஷர் குக்கரின் மூடியை மூடி விசிலை யும் பொருத்தி மிதமான தீயிலேயே 10 நிமிடங்கள் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

17. அதன்பிறகு 10 நிமிடங்கள் கழித்து பிரஷர் குக்கரின் மூடியை திறந்து பிரியாணி துடுப்பு மூலம் கறியும் அரிசியும் குழையாத வாறு மசாலாவுடன்கிளறி வெங்காய பச்சடி உடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக