எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

கிராமத்து கோழிக்குழம்பு


தேவையானவை : கோழி 3/4கிலோ, தக்காளி, பொடியாக நறுக்கியது -1 கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கு, வெங்காயம், பொடியாக நறுக்கியது -1, கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க, மிளகாய் வத்தல் - 10...தனியா - 1டேபிள் ஸ்பூன், மிளகு - 2டீஸ்பூன், பட்டை, லவங்கம், கசகசா - 1 டீஸ்பூன், ஏலக்காய் -2, தேங்காய், பொடியாக நறுக்கியது - 1/4 கப், பூண்டு - 6பல், சோம்பு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு & எண்ணெய் - தேவைக்கு..

செய்முறை: கோழித்துண்டுகளை நன்கு நீரில் அலசி அதில் மஞ்சள் தூள் தடவி 10நிமிடங்கள் தனியாக எடுத்து வைக்கவும் ஒரு கரண்டி தயிர் அல்லது எலுமிச்சை சேர்த்து பிரட்டியும் வைக்கலாம்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனித் தனியாக வறுத்து எடுத்து அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

பாத்திரத்தில் 1கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.. அதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பிரட்டிய கோழி துண்டுகளை தண்ணீர் இல்லாமல் மூடி வேக விடவும். பிறகு இதில் அரைத்த விழுது, தண்ணீர், (கோழியைக் கழுவிய நீர் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்) உப்பு சேர்த்து
எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.. கடைசியில் எண்ணெயில் தாளித்த கறிவேப்பிலை & கொத்தமல்லி இழைகள் தூவி ஓரிரு நிமிடங்கள் கழித்து இறக்கவும் கம கம கிராமத்து கோழிக்குழம்பு தயார்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக