எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 29 டிசம்பர், 2018

RASI PALAN 2019 IN TAMIL - ரிஷபம்

நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவர்களே!
ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் நழுவவிடாமல் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வலிமை ஏற்படும். புது வேலை கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.
வருடம் பிறக்கும்போது ராசிக்கு 11-ல் செவ்வாய் இருப்பதால்,செல்வம், செல்வாக்கு உயரும். அனுபவப்பூர்வமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பீர்கள். சகோதரர்கள் அன்புடன்
இருப்பார்கள்.



வருடத் தொடக்கத்திலிருந்து 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் மனவருத்தங்களும் ஏற்பட்டு நீங்கும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் தடைகள் ஏற்படக்கூடும். ஆனால், 3-ல் ராகு இருப்பதால் துணிச்சல் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை வேண்டாம். யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடவேண்டாம்.
சுக்கிரன் 6-ல் இருக்கும் நேரத்தில் வருடம் பிறப்பதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
இந்த வருடம் தொடக்கம் முதல் 12.3.19 வரை மற்றும் 19.5.19 முதல் 27.10.19 வரை குரு 7-ல் இருந்துகொண்டு ராசியைப் பார்ப்பதால், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரமாகவும் 28.10.19 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ல் மறைவதால், உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் ஏற்படும். திடீர்ப் பயணங்களால் உடல் அசதி உண்டாகும். அவசியமான செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனம் தேவை. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். யாருக்கும் எதற்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் அஷ்டமச் சனி தொடர்வதால், அடிக்கடி கோபம் ஏற்படும். கடந்த கால ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். மூன்றாவது நபர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டாம். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற மனபிரமை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

வியாபாரிகளே! வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி முதலீடு செய்யவேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையாள்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் பிரிவு ஏற்படக்கூடும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழ்நிலை ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதே நல்லது. அதிகாரிகள் குறை கூறினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். அவதூறு வழக்குகளும் ஏற்படக்கூடும்.
மாணவர்களே! பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். விளையாடும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் ஏற்படக்கூடும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக